பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
பாணந்துறை பிரதேசத்தில் பாரவூர்தி ஒன்றும் உந்துருளி ஒன்றும் மோதுண்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
விபத்தில் படுகாயமடைந்த சிற்றூந்தின் சாரதி பாணந்துறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.
56 வயதுடைய நுகேகொடை பிரதேசத்தினை சேர்ந்த நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் பாரவூர்தியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் பாணந்துறை காவற்துறை மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.