கொரோனவால் மேலும் ஒருவர் இந்தியாவில் பலி

கொரோனவால் மேலும் ஒருவர் இந்தியாவில் பலி

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
கொரோனவால் மேலும் ஒருவர் இந்தியாவில் பலி

இந்தியாவிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. நாட்டில் இதுவரை 324 பேருக்கு வைரஸ் பரவியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்த இன்று நாடு முழுவதும் மக்கள் சுய ஊரடங்கை கடைபிடித்துவருகின்றனர்.

இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் கொரோனா பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 63 வயது நிரம்பிய நபர் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக அம்மாநில பொதுச்சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது.

இதனால் இந்தியாவில் கொரோனா தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது.

பயனுள்ள இணைப்புகள் இங்கே

Tamil News
Tamil Technology News
Tamilnadu News
Tamil Serial
World Tamil News

About அருள்

Check Also

இந்தியாவில் 649 பேர் கொரோனா பாதிப்பு - 13 பேர் பலி

இந்தியாவில் 649 பேர் கொரோனா பாதிப்பு – 13 பேர் பலி

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!1Shareஇந்தியாவில் 649 பேர் கொரோனா பாதிப்பு – 13 பேர் பலி இந்தியாவில் இதுவரை கொரோனாவால் 649 …