சட்டக்கல்லூரி மாணவி அளித்த பாலியல் புகாரை தொடர்ந்து, பாஜகவின் முன்னாள் மத்திய இணை அமைச்சர் சின்மயானந்தா இன்று கைது செய்யப்பட்டார். உத்தர பிரதேசம், ஷாஜஹான்பூரை சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவி ஒருவர், பாஜகவை சேர்ந்த மத்திய இணை அமைச்சர் சின்மயானந்தாவுக்கு எதிராக பாலியல் குற்றம் சாட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோவை வெளியிட்டவுடன் அந்த மாணவி மாயமானார். பின்பு அந்த மாணவியை ராஜஸ்தானிலிருந்து மீட்டுக் கொண்டுவந்து உச்சநீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். …
Read More »அமலாக்கத்துறையினரிடம் சரணடைய தயார்.. ப சிதம்பரம் தரப்பில் வாதம்
ஐ என் எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் ப சிதம்பரம், அமலாக்கத்துறைனரிடம் சரணடைய தயார் என அவரது தரப்பு நீதிமன்றத்தில் கூறியுள்ளது. ஐ என் எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ அதிகாரிகளால் காவலில் வைக்கப்பட்டார் ப சிதம்பரம். பின்பு 4 முறை காவல் நீட்டிக்கப்பட்டது. இதனிடையே அமலாக்கத்துறையினரால் தொடுக்கப்பட்ட வழக்கில் ப சிதம்பரம் தரப்பில் அளிக்கப்பட்ட மேல் முறையீட்டு ஜாமீன் மனு உச்ச நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது. இதனால் அமலாக்கத்துறை …
Read More »ஒகேனக்கல்லில் நீர்வரத்து 11,000 கன அடியாக உயர்வு
மேட்டூர் மற்றும் ஒகேனக்கல் அணைகளின் நிலவரங்கள் …. கர்நாடக மாநிலத்தில் உள்ள, கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி ஆகிய இரு அணைகளில் இருந்து, வினாடிக்கு 14 ஆயிரத்து 500 கன அடி உபரிநீர், தமிழகத்துக்கு வெளியேற்றப்பட்டு வருகிறது. தமிழக எல்லையான பிலிகுண்டுலு வழியாக, ஒகேனக்கல் வரும் காவிரி நீரின் வரத்து, வினாடிக்கு 11 ஆயிரம் கனஅடியாக தொடர்ந்து நீடித்து வருகிறது. நீர்வரத்து காரணமாக ஒகேனக்கல்லில் 22 வது நாளாக குளிக்க …
Read More »அருண் ஜெட்லி உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்த ஏற்பாடு
மறைந்த முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லி உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக டெல்லி பாஜக தலைமையகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அருண் ஜெட்லி நேற்று காலமானார். டெல்லியிலுள்ள வீட்டில் வைக்கப்பட்ட உடலுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் …
Read More »முன் ஜாமீன் பெற்றார் ப.சிதம்பரம் – உத்தரவிட்ட உச்சநீதிமன்றம்
முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் அமலாக்கத்துறைக்கு எதிராக தொடர்ந்த வழக்கில் முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம். சிபிஐ வழக்கு திங்கட்கிழமை விசாரணைக்கு வரும் என்றும் கூறப்பட்டுள்ளது. 2007ல் நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் ஐஎன்எக்ஸ் மீடியா அந்நிய முதலீட்டை பெற அனுமதி வழங்கியதாகவும், அதற்கு லஞ்சமாக பணம் பெற்றதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. அதேசமயம் சட்ட விரோத பண பரிவர்த்தனை குறித்த வழக்கை அமலாக்கத்துறையினர் விசாரித்து …
Read More »கனமழையால் 4 மாநிலங்களில் பலியானோர் எண்ணிக்கை 114 ஆக உயர்வு
கேரளா, கர்நாடகா மற்றும் மகாராஷ்ட்ரா உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ள பெருக்கில் சிக்கி, பலியானோர் எண்ணிக்கை 114-ஆக உயர்ந்துள்ளது. பல மாநிலங்களில் கடந்த சில வாரங்களாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் கேரளா, கர்நாடகா, குஜராத் மற்றும் மகாராஷ்ட்ரா ஆகிய மாநிலங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், வீடுகளை இழந்தவர்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளன. கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி, …
Read More »மீண்டும் வெள்ளத்தில் மூழ்கிய கேரளா: வைரலாகும் வீடியோ
தென்மேற்கு பருவமழையால் இந்தியாவின் பல பகுதிகளில் விடாது கனமழை பெய்து வருகிறது. தற்போது கேரளாவின் பல பகுதிகளில் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ராகுல்காந்தியின் மக்களவை தொகுதியான வயநாடு கடுமையாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. வயநாடு முழுவதும் வெள்ளம் சூழ்ந்திருக்கும் வீடியோக்களும், வீடுகள் இடிந்துவிழும் வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. வயநாடு மக்களுக்கு தேவையான உதவிகள் செய்யவேண்டும் எனவும், மீட்பு பணிகளை துரிதப்படுத்த வேண்டும் எனவும் ராகுல் காந்தி மத்திய அரசை …
Read More »ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் காங்கிரஸ் மீது குற்றம் சாட்டிய வைகோ
ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் காங்கிரசை அவதூறாக பேசிய வைகோவை பச்சோந்தி என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி விமர்சித்துள்ளார். இதனால் திமுக கூட்டணியில் பிளவு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. ஜம்மு காஷ்மீர் சிறப்பு அதிகார ரத்து மசோதா மீதான விவாதத்தில் பேசிய வைகோ, காங்கிரஸ் கட்சி மற்றும் ஜவஹர்லால் நேருவின் தவறான கொள்கையே ஜம்மு காஷ்மீரின் நிலைக்கு காரணம் என்று குற்றம்சாட்டியிருந்தார். வைகோவின் மாநிலங்களவை பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள …
Read More »தமிழ்நாடு இரண்டாக பிரிக்கப்படுமா? ப.சிதம்பரம் கேள்விக்கு அதிமுக எம்பி பதில்!
காஷ்மீரின் 70வது சிறப்புப் பிரிவை ரத்து செய்ததையும், அம்மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசமாக பிரிக்கப்படும் முடிவையும் எடுத்த மத்திய அரசுக்கு எதிர்க்கட்சிகள் குறிப்பாக காங்கிரஸ், திமுக ஆகிய கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. 370ஆவது பிரிவை ரத்து செய்வது மற்றும் மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்படுவதை கூட காங்கிரஸ் பெரிதுபடுத்தவில்லை. ஆனால் இதனை செய்யும் முறை தவறு என்றும், மத்திய அரசு தனது மெஜாரிட்டியை பயன்படுத்தி அராஜகமாக இந்த நடவடிக்கை …
Read More »கங்கை நீர் எடுத்து வந்த இஸ்லாமிய வாலிபர் மீது தாக்குதல் !
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள பாக்பாத் கிராமத்தி வசிக்கும் இளைஞர் இர்ஷாத். இவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து , கன்வார் யாத்திரையில் கலந்து கொண்டு ஹரித்துவாரில் இருந்து கங்கை நீரை எடுத்து , தங்கள் கிராமத்தி உள்ள சிவன் கோவிலுக்கு பூஜை செய்யதற்க்காக கொண்டுவரும்போது, இளைஞரையும், அவரது குடும்பத்தையும் சிலர் தாக்கியுள்ளனர். இதுகுறித்து குறித்து அங்குள்ள காவல் நிலைத்தில் இளைஞர் புகார் அளித்தார். இதனையடுத்து அவர் கூறியுள்ளதாவது : நானும் எனது …
Read More »