இரண்டாவது தடவையாக இந்தியாவின் பிரதமர் பதவியை ஏற்றுள்ள நரேந்திர மோடியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று சந்தித்துள்ளார். ஐதாபாத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது இருநாட்டு உறவுகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்திய பிரதமராக இரண்டாவது தடவையாகவும் நரேந்திரமோடி பதவி ஏற்கும் நிகழ்வில் கலந்துக் கொள்வதற்காக ஜனாதிபதி தலைமையில், அமைச்சர்களான மனோகணேசன், ரவுப் ஹக்கீம் ஆகியோருடன், நாடாளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமான் உள்ளிட்டவர்களும் …
Read More »அமைச்சர் பதவி : ஓபிஎஸ் மகனுக்கு ஏமாற்றம் ! அதிர்ச்சியில் அதிமுக
இந்தியாவின் 17 வது மக்களவைத் தேர்தலில் பெரும் வெற்றி பெற்றதை அடுத்து, பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் பிரமராக இன்று பதவியேற்கிறார். இந்த விழாவில் பங்கேற்க வெளிநாட்டு தலைவர்கள், மாநில தலைவர்கள் பலர் அழைக்கப்பட்டனர். நம் நாட்டின் குடியரசு தலைவர் மற்றும் முதல்குடிமகனான ராம் நாத் கோவிந்த் மேடையில் நின்று அழைக்க. கெம்பீரமாக நடந்துவந்த மோடி மைக்கின் முன்னால் நின்றுகொண்டு இந்தியப் பிரதமராகப் பதவியேற்றார். மோடிக்கு குடியரசு தலைவர், பதவிப் …
Read More »திருப்பி அனுப்பப்பட்டுள்ள புகழிடக்கோரிக்கையாளர்கள்
படகுமூலம் அவுஸ்திரேலியாவுக்கு பயணித்த 20 இலங்கை புகழிடக்கோரிக்கையாளர்கள், அந்நாட்டு அதிகாரிகளினால் இடைமறிக்கப்பட்டு மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். அவுஸ்திரேலிய கடலோர பாதுகாப்பு அதிகாரிகளை மேற்கோள்காட்டி அந்நாட்டு ஊடகங்கள் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளன. குறித்த இலங்கை புகழிடக்கோரிக்கையாளர்கள், நடுக்கடலில்வைத்து இடைமறிக்கப்பட்டு, கிறிஸ்மஸ்தீவுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். கடற்படையினரால் மீட்கப்பட்டவர்களில் ஒரு குழந்தையும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மே மாத முற்பகுதியில் இலங்கையிலிருந்து புறப்பட்டதாக கருதப்படும் குறித்த படகு அவுஸ்திரேலிய கடற்படையினரால் கடந்தவாரம் இடைமறிக்கப்பட்டிருக்கலாம் என்று …
Read More »இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ள கூப்பர்
அமெரிக்காவின் அரசியல் மற்றும் இராணுவ விவகாரங்களுக்கான உதவி ராஜாங்க செயலாளர் ஆர்.க்ளார்க் கூப்பர் அடுத்தவாரம் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது. சிங்கபூருக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள அவர், அடுத்தவாரம் இலங்கை வந்து பல்வேறு சந்திப்புகளை நடத்தவுள்ளார். அரசாங்க அதிகாரிகள், புத்திஜீவிகள் உள்ளிட்ட தரப்பினரை சந்திக்கவுள்ள அவர், பாதுகாப்பு, சமாதனம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடல்களை நடத்தவுள்ளார்.
Read More »சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை மேற்கொண்டிருக்கவில்லை
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலுக்கு முன்னர் இரண்டு மாதங்களாக பாதுகாப்புச் சபையின் கூட்டம் இடம்பெறாமை பாரிய பிரச்சினைக்குரியதாகும் என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். தங்காலை – கால்டன் இல்லத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது ஊடகங்களிடம் கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இரண்டு மாதங்களாக பாதுகாப்புச் சபையின் கூட்டம் இடம்பெறாமலிருந்தது பாரிய தவறாகும். இந்த விடயத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும், தலைவர்களும் உரிய முறையில் செயற்பட்டிருக்கவில்லை. எவ்வாறிருப்பினும், …
Read More »உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் அறிந்திருக்கவில்லை – ஜனாதிபதி மீண்டும் தெரிவிப்பு!
கடந்த ஏப்ரல் 8ம் திகதி சிரேஷ்ட காவற்துறை அதிகாரிகளின் கூட்டத்தின் போது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தனக்கு அறிவிக்கப்பட்டதாக வௌியாகியுள்ள செய்தியை நிராகரிப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் கணக்கில் பதிவொன்றை மேற்கொண்டு ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார். தனக்கு அவ்வாறு எவ்வித அறிவிப்புக்களும் மேற்கொள்ளப்படவில்லை என ஜனாதிபதி இதன் போது குறிப்பிட்டுள்ளார்.
Read More »ரஜினிக்கு இருக்கும் தகுதி ஸ்டாலினுக்கு இல்லையா? பாஜக அழைப்பு விடாதது ஏன்?
மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்கும் விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின் அழைக்காதது ஏன் என சில யூகங்கள் வெளியாகியுள்ளது. இந்தியாவின் 17 வது மக்களவைத் தேர்தலில் பெரும் வெற்றி பெற்றதை அடுத்து, பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் பிரமராக இன்று பதவியேற்கிறார். இந்த விழாவிற்கு வெளிநாட்டு தலைவர்கள், மாநில தலைவர்கள் பலர் அழைக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டை பொருத்தவரை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், ரஜினிகாந்த் ஆகியோருக்கு அழைப்பு …
Read More »கிளிநொச்சியில் இன்று மாலை வாள்வெட்டுக் கும்பல் அடாவடி
கிளிநொச்சி, செல்வாநகர் பகுதியில் இன்று (29) மாலை இடம்பெற்ற வாள்வெட்டுக் கும்பலின் தாக்குதலில் 9 பேர் படுகாயமடைந்துள்ளனர். ஒரு கர்ப்பிணிப் பெண் உட்பட 6 பெண்களும், 3 ஆண்களும் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். சம்பவம் இடம்பெற்ற பகுதியில் உள்ள வீடுகள் இரத்தத்தால் தோய்ந்து காணப்படுகின்றன. பட்டா ரக வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் முகமூடி அணிந்து வாள்களுடன் வந்த 15 இற்கும் மேற்பட்டவர்கள் வீடுகளுக்குள் …
Read More »விசேட தெரிவுக்குழுவின் சாட்சி விசாரணைகள் இன்று
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பில் ஆராய்ந்து நாடாளுமன்றில் அறிக்கை சமர்ப்பிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள விசேட தெரிவுக்குழுவின் சாட்சி விசாரணைகள் இன்று ஆரம்பமாகின. நாடாளுமன்ற குழு அறை இலக்கம் 3இல் இன்று முற்பகல் ஆரம்பமான தெரிவுக்குழுவின் சாட்சி விசாரணைகளை அறிக்கையிட ஊடகங்களுக்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. இந்த தெரிவுக்குழுவில், பாதுகாப்புச் செயலாளர் சாந்த கோட்டேகொட முதலாவது நபராக சாட்சியமளித்தார். தெரிவுக்குழுவின் தலைவரான பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறியினால், பாதுகாப்புச் செயலாளரிடம் சாட்சி விசாரணைகள் …
Read More »பெண்கள் உட்பட ஐவர் காயம்…
முல்லைத்தீவு – மாங்குளம் பகுதியில் நேற்று இரவு, வீடொன்றுக்குள் வீடு புகுந்து, வாள் வெட்டு குழுவினர் நடத்திய தாக்குதலில் பெண்கள் உட்பட ஐவர் காயமடைந்ததாக எமது செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்கள் மாங்குளம் வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், குறித்த வீட்டில் இருந்த பொருட்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதுடன், சில பொருட்களை குறித்த குழுவினர் களவாடி சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மாங்குளம் காவற்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.
Read More »