செய்திகள்

News

சென்னையில் இருந்து வந்த நபர் கைது!

ஒருவர் கைது

ஐஸ் ரக போதைப்பொருள் 2.9 கிலோ கிராமுடன் சென்னையில் இருந்து இந்நாட்டுக்கு வருகை தந்த இலங்கையர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். 68 வயதுடைய முதியவர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. புனித ரமழான் நோன்பு நாள் இன்று முதல் ஆரம்பம்.

Read More »

புனித ரமழான் நோன்பு நாள் இன்று முதல் ஆரம்பம்.

புனித ரமழான்

இலங்கை வாழ் முஸ்லிம்கள் புனித ரமழான் மாத முதலாம் நோன்பினை இன்று அனுஷ்டிக்கின்றனர். கடந்த ஞாயிற்றுக் கிழமை தலை பிறை தென்படாததால், இன்று முதல் நோன்பினை அனுஷ்டிக்க கொழும்பு பெரிய பள்ளிவாசலின் பிறைக்குழு தீர்மானித்திருந்தது. இதன்படி இன்று அதிகாலை முதல் முஸ்லிம்கள் நோன்பினை அனுஷ்டிக்க ஆரம்பித்துள்ளனர். அரசாங்கத்திற்கு ஆதவளிக்க தயார் – ஜீ.எல்.பீரிஸ்

Read More »

அரசாங்கத்திற்கு ஆதவளிக்க தயார் – ஜீ.எல்.பீரிஸ்

ஜீ.எல்.பீரிஸ்

மனித உயிர்களை பாதுகாப்பதற்காக அரசாங்கம் எடுக்கும் எந்தவொரு நடவடிக்கைக்கும் ஶ்ரீலங்கா பொது ஜன முன்னணி மற்றும் கூட்ட எதிர்க்கட்சியினர் நிபந்தனைகள் இன்றி ஆதரவளிக்க தயார் என பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனை தெரிவித்தார். யாழ் பல்கலை மாணவர்களை பிணையில் விடுவிப்பதா?

Read More »

யாழ் பல்கலை மாணவர்களை பிணையில் விடுவிப்பதா?

யாழ்ப்பாணம்

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் மற்றும் செயலாளார் ஆகிய இருவரையும் பிணையில் விடுவிப்பதா? அல்லது வழக்கிலிருந்து விடுதலை செய்வதா? என்ற கட்டளை நாளை மறுதினம் புதன்கிழமை வழங்கப்படும் என யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.எஸ்.பீற்றறர்போல் வெளிப்படுத்தியுள்ளார். யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்திற்குள் இராணுவம் நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது தமிழீழ விடுதலை புலிகளின் தலைவருடையதும், மாவீரர்களுடையதும் புகைப்படங்கள் இருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர். கோப்பாய் காவற்துறை …

Read More »

யாழில் இடம்பெற்ற விபத்தில் பெண் பலி.. மேலும் ஒருவர் படுகாயம்

யாழில்

யாழ்ப்பாணம் – பலாலி வீதியில் சுன்னாகம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்ததுடன், மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். வேன் ரக வாகனம் ஒன்றும், துவிச்சக்கரவண்டியொன்றும் மோதி நேற்றைய தினம் இந்த விபத்து இடம்பெற்றுள்ள நிலையில், சம்பவத்தில் துவிச்சக்கரவண்டியின் பின்னால் பயணித்த 49 வயதான அதே பகுதியை சேர்ந்த பெண்ணே உயிரிழந்துள்ளார். துவிசக்கரவண்டியை செலுத்தியவர் படுகாயங்களுக்கு உள்ளாகி யாழ்ப்பாணம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வருகிறார். இதேவேளை, சிலாபம் கொழும்பு பிரதான …

Read More »

காவல்துறைமா அதிபர் உள்ளிட்ட மூவருக்கு அழைப்பாணை

காவல்துறைமா

காவல்துறைமா அதிபர் பூஜித் ஜயசுந்தர, முன்னாள் திறைசேரியின் செயலாளர் பி.பீ.ஜயசுந்தர மற்றும் ஊழல் ஒழிப்பு குழுவின் பணிப்பாளர் ஆகியோரை எதிர்வரும் 23 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொழும்பு நிரந்தர நீதாய மேல் நீதிமன்றம் இந்த அழைப்பாணையை பிறப்பித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி பணிக்குழாமின் பிரதானி காமினி செனரத் உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபர் தாக்கல் செய்துள்ள வழக்கிற்கு அமைவாக சாட்சி வழங்கவே அவர்கள் நீதிமன்றுக்கு …

Read More »

நீர்கொழும்பு சம்பவம் – சேதங்கள் தொடர்பில் இழப்பீடு

நீர்கொழும்பு

நீர்கொழும்பில் நேற்றைய தினம் ஏற்பட்ட அமைதியற்ற நிலைமை காரணமாக பொது சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. எனவே ஏற்பட்டுள்ள சேதங்களை மதிப்பீடு செய்து இழப்பீடு வழங்கப்படும் என பிரதமர் அலுவலகம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது. நூற்றுக்கணக்கான வெளிநாட்டவர்கள் இலங்கையில் இருந்து வெளியேற்றம்

Read More »

நூற்றுக்கணக்கான வெளிநாட்டவர்கள் இலங்கையில் இருந்து வெளியேற்றம்

வெளியேற்றம்

இலங்கையில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலை அடுத்து, 600 வெளிநாட்டவர்கள் இலங்கையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்துறை அமைச்சர் வஜிர அபேவர்தனவை மேற்கொள்காட்டி, ஆங்கில ஊடகம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. அவர்களுள் 200 இஸ்லாமிய மத போதர்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் வீசா அனுமதி நிறைவந்த நிலையிலும் இலங்கையில் தங்கியிருந்தாக குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்களுள் பெரும்பான்மையானவர்கள், இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான் மற்றும் மாலைத்தீவு ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சமூகவலைத்தளங்கள் …

Read More »

சமூகவலைத்தளங்கள் மீண்டும் வழமைக்கு

சமூகவலைத்தளங்கள்

பேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைத்தளங்களுக்குள் பிரவேசிப்பதற்கு தற்காலிகமாக விதிக்கபட்டிருந்த தடை விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நாலக கலுவெவ தெரிவித்துள்ளார். நீர்கொழும்பில் நேற்றைய தினம் ஏற்பட்ட அமைதியின்மையை தொடர்ந்து இவ்வாறு சமூகவலைத்தளங்கள் தற்காலிகமாக மூடக்கப்பட்டிருந்தன.

Read More »

சஹ்ரானின் பயிற்சி முகம் கண்டுபிடிப்பு

சஹ்ரானின்

தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் சஹ்ரானுக்கு சொந்தமானது என சந்தேகிக்கப்படும் 15 ஏக்கர் கொண்ட பயிற்சி முகாம் ஒன்று காத்தான்குடி பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சஹ்ரானின் பயிற்சி முகாம் கண்டுபிடிப்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புப் படையினரை மேற்கோள்காட்டிக் கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. காத்தான்குடியில் 15 ஏக்கர் நிலத்தில் இப்பயிற்சி முகாம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் இக்காணி சஹரானிற்குச் சொந்தமானது எனவும் அத்தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன. இன்றைய ராசிப்பலன் 06 வைகாசி 2019 திங்கட்கிழமை

Read More »