செய்திகள்

News

இரு வெளிநாட்டவர்கள் கைது

சாய்ந்தமருதைச்

வெலிகட ராஜகிரிய பிரதேசத்தில் வீசாயின்றி உள்நாட்டில் தங்கியிருந்த இரு வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் 28 மற்றும் 32 வயதுடைய இந்திய நாட்டவர்கள் என காவற்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. வெலிகட காவற்துறைக்கு கிடைக்க பெற்றுள்ள தகவல் ஒன்றுக்கமைய நேற்றைய தினம் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Read More »

உலகளாவிய ரீதியாக கொண்டாடப்படும் மே தினம்

ஜனாதிபதி

தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுத்த நாளாக இன்று மே தினம் உலகளாவிய ரீதியாக கொண்டாடப்படுகின்றது. 18ஆம் நூற்றாண்டு காலப்பகுதயில் 12 முதல் 18 மணி நேரக் கட்டாய வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டமைக்கு எதிராக ஏற்பட்ட புரட்சியே மேதின உருவாக்கத்தின் ஆரம்பமாக இருந்தது. குறிப்பாக இங்கிலாந்தில் தோன்றிய சாசன இயக்கம் இதில் முக்கிய பங்கினை வகித்தது. சாசன இயக்கம் 6 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து தொடர் போரட்டங்களை நடத்தியது. அதில் குறிப்பிடத்தக்கது 10 …

Read More »

புர்கா அணிவதை தடை செய்த நாடுகள் எவை?

புர்கா

ஆள் அடையாளங்களை உறுதி செய்யும் வகையில் முகத்தை முழுமையாக மூடி ஆடை அணிவதை இலங்கை தடை செய்துள்ளது. ஈஸ்டர் அன்று இலங்கையில் பல்வேறு பகுதிகளில் நடந்த குண்டுவெடிப்பில் 250க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அதனை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இப்படியான சூழ்நிலையில் எந்தெந்த நாடுகளில் முகத்தை முழுமையாக மூடி, ஆடை அணிவது தடை செய்யப்பட்டுள்ளது என காண்போம். 1. பிரான்சில்தான் முதல்முதலாக அதாவது 2011 ஆம் ஆண்டு முழுமையாக முகத்தை …

Read More »

கொள்கையுடன் போராடியமையால்தான் புலிகளை ஆதரித்தார்கள் தமிழ் மக்கள்!!

அடிப்படைவாத தீவிரவாதிகள்

– அவர்கள் மதவெறி பிடித்தவர்கள் அல்லர் என்கிறார் மைத்திரி “தமிழீழ விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகள். அதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. எனினும், அவர்கள் மதவெறி பிடித்தவர்கள் அல்லர். அவர்கள் தமது இனத்துக்காக இறுதிவரைப் போராடினார்கள். கொள்கையுடன் அவர்கள் போராடியதால்தான் அவர்களைத் தமிழ் மக்கள் ஆதரித்தார்கள். இதுதான் உண்மை.” – இவ்வாறு தெரிவித்தார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. சர்வதேச செய்திச் சேவையொன்றின் கொழும்புச் செய்தியாளருக்கு வழங்கிய விசேட செவ்வியின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். …

Read More »

அதிரடி சுற்றிவளைப்புக்கள்

தற்கொலை

சாய்ந்தமருது பிரதேசத்திற்கு வெடிப்பொருட்களுடன் தாக்குதல்தாரிகளை ஏற்றி சென்றதாக சந்தேகிக்கப்படும் 250-5680 இலக்க தகட்டை கொண்ட சிற்றூர்ந்து புளியங்குளம் பகுதியில் கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த வாகனத்துடன் சந்தேகத்துக்குரிய ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இதேவேளை, மதவாச்சி – தல்கஸ்வெவ பகுதியில் வைத்து காவற்துறையினரால் கைது செய்யப்பட்ட தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் சஹ்ரான் ஹாசீமின் பிரசார செயற்பாடுகளில் ஈடுபட்டவரை 72 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரணை செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவை அநுராதப்புரம் பிரதான …

Read More »

யாழில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் ஒருவர் பலி

யாழில்

தென்மராட்சி – பாலாவிப் பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் ஒருவர் பலியானார். மேலும் ஏழு பேர் காயமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது. பாலாவிப் பகுதியில் இன்று மாலை சுமார் முப்பது பேர் அடங்கிய கும்பல் ஒன்று வாள்கள் மற்றும் இரும்பு கம்பிகளைக் கொண்டு தாக்குதலை நடத்தி இருப்பதாக கூறப்படுகிறது. கொடிகாமம் காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதேவேளை, திருகோணமலை – கந்தளாய் பிரதான வீதி தம்பலகாமம் பகுதியில் இடம்பெற்ற …

Read More »

அறிமுகமாகவுள்ள புதிய சட்டம்!

அறிமுகமாகவுள்ள

நாட்டின் தற்போதைய நிலையை கருத்திற் கொண்டு புல்பேஸ் எனப்படும் முகத்தை முழுமையாக மறைக்கும் தலைக்கவச பயன்பாடு சில கட்டுப்பாடுகளுக்கு உட்படும் என போக்குவரத்து ராஜாங்க அமைச்சர் அஷோக் அபேசிங்க தெரிவித்துள்ளார். பாதுகாப்பு அமைச்சினால் விடுக்கப்பட்ட விஷேட வர்த்தமானி அறிவித்தலுக்கமைய முகத்தை முழுமையாக மறைக்கும் தலைக்கவச பயன்பாடு தொடர்பில் புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். முகத்தை முழுமையாக மறைக்கும் ஆடை மற்றும் முகத்திரை தடை தொடர்பான விஷேட வர்த்தமானி அறிவித்தல் …

Read More »

குண்டு துளைக்காத வாகனத்தை நிராகரித்த ரஞ்சித் ஆண்டகை!

ரஞ்சித்

தான் பாதுகாப்பாக பயணிக்க வழங்கப்பட்ட வாகனம் குண்டு துளைக்காத வாகனம் என அறிந்துக் கொண்டதன் பின்னர் அதனை நிராகரித்ததாக பேராயர் மெல்கம் காதினல் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். அவரின் இல்லத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.

Read More »

தீவிரவாதிகளை நிச்சயம் தோல்வியுற செய்வேன் – ஜனாதிபதி சூளுரை

அடிப்படைவாத தீவிரவாதிகள்

தீவிரவாதிகளை நிச்சயம் தோல்வியடைய செய்வேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இன்றைய தினம் வர்த்தகர்களை சந்தித்த போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். சுற்றுலா தொழில்துறையுடன் தொடர்புடைய வணிகம், விருந்தகம் உள்ளிட்ட சில துறைகளை சார்ந்த வர்த்தகர்கள் மற்றும் ஜனாதிபதிக்கு இடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட மேலும் பலர் கலந்து கொண்டிருந்தனர். சஹ்ரானின் குடும்பத்தைச் சேர்ந்த 18 பேர் எங்கே?

Read More »