இலங்கையில் கடந்த 21ம் திகதி இடம்பெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதல்களை அடுத்து, அதன் சூத்திரதாரியான சஹ்ரானின் குடும்பத்தைச் சேர்ந்த 18 பேர் உயிரிழந்தோ அல்லது காணாமல் போயோ இருப்பதாக அவரது சகோதரி தெரிவித்துள்ளார். மொஹமட் ஹாசிம் மதானியா என்ற அவர், சீ.என்.என். ஊடகத்துக்கு வழங்கிய செவ்வியில் இதனைக் கூறியுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை சாய்ந்தமருதில் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பின் போது, சஹ்ரானின் தந்தையும் இரண்டு சகோதரர்களும் உயிரிழந்தனர். அவர்களுடன் ஆறு சிறார்களும் உயிரிழந்தனர் என்பது …
Read More »அரசாங்கத்தின் செயற்பாடு தொடர்பில் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அதிருப்தி!
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துவார்களாயின் அவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை வலியுறுத்தியுள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். பயங்கரவாத தாக்குதல்களை மேற்கொள்வதற்கு தேவையான வெடிப்பொருட்கள் கொண்டு வரப்பட்டமை தொடர்பில் விஷேட விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என அவர் கோரியுள்ளார். அத்துடன் …
Read More »தேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்பின் கொழும்பு பிரதானிக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
தேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்பின் கொழும்பு வழிநடத்தல்களை மேற்கொண்ட மொஹமட் ஃபரூக் மொஹமட் ஃபவாஸை 72 மணி நேரங்கள் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவரை இன்றைய தினம் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வாழைத்தோட்டம் பகுதியில் அடுக்குமாடி வீடொன்றில் அவர் தங்கியிருப்பதாக கிடைத்த தகவலுக்கு அமைய நேற்றைய தினம் கைது செய்யப்பட்டிருந்தார். இதன்போது அவரிடமிருந்து அந்த அமைப்பிற்கு சொந்தமான …
Read More »சம்மாந்துறை , கல்முனை மற்றும் சவளக்கடை பகுதிகளுக்கு காலை 8 மணியுடன் ஊரடங்கு சட்டம் நீக்கம்
சம்மாந்துறை , கல்முனை மற்றும் சவளக்கடை பிரதேசங்களில் அமுலில் உள்ள காவற்துறை ஊரடங்கு சட்டம் இன்று காலை 8 மணியுடன் நீக்கப்படும் என காவற்துறை ஊடக பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். குறித்த பகுதிகளுக்கு நேற்று மாலை 5 மணிமுதல் மறுஅறிவித்தல் வரை காவற்துறை ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டிருந்து. எவ்வாறாயினும் , நேற்றைய தினம் நாட்டின் ஏனைய பகுதிகளுக்கு காவற்துறை ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Read More »‘போனி’ சூறாவளி – பொதுமக்களுக்கு வானிலை மையம் விடுத்துள்ள எச்சரிக்கை!
வங்காள விரிகுடாவில் நிலைக்கொண்டுள்ள ‘போனி’ சுறாவளியானது மேலும் வலுவடைந்து, நாளை மாலை அளவில் இலங்கையின் வடக்கு மற்றும் வடகிழக்கு திசையை நோக்கி நகரும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. இது அடுத்த 12 மணித்தியாலங்களில் ஒரு பலத்த சூறாவளியாகவும் தொடர்ந்து 24 மணித்தியாலங்களில் ஒரு மிகப் பலத்த சூறாவளியாகவும் விருத்தியடையக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக அந்த நிலையம் வௌியிட்டுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இத் தொகுதி ஏப்ரல் 30ஆம் திகதி வரை …
Read More »புர்க்கா ஆடைக்கு தடை – பிரதமர் விடுத்துள்ள அறிவிப்பு
வௌிநாட்டு தீவிரவாத அமைப்புக்களுடன் இணைந்து செயற்படும் இலங்கையர்கள் தொடர்பில் சட்டத்தை செயற்படுத்தும் போது ஏற்படும் பிரச்சினைகளை தவிர்த்துக் கொள்வதற்கு உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் நிறைவேற்றப்பட வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது பிரதமர் இதனை தெரிவித்தார். இதேவேளை , புர்க்கா பயன்பாட்டை தடை செய்வதற்கு பிரதமர் எதிர்ப்பு தெரிவித்ததாக பரவும் செய்தியில் உண்மையில்லை என பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. அந்த …
Read More »கல்வி அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கை
இஸ்லாமிய அடைப்படைவாதத்தை கற்பிக்கும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ள, அரபு மொழி பாடசாலைகள் மற்றும் மதராசா பாடசாலைகள் என்பன கல்வி அமைச்சின் கீழ் இயங்கவில்லை என அந்த அமைச்சு தெரிவித்துள்ளது. கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் குறித்த பாடசாலைகள் கல்வி அமைச்சின் கீழ் இயங்கியதாகவும், அவற்றில் அடிப்படைவாதம் கற்பிக்கப்பட்டமைக்கு கல்வி அமைச்சே பொறுப்பு கூறவேண்டும் எனவும், தெரிவிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையிலேயே குறித்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது இன்றைய …
Read More »ஐ.எஸ் அமைப்பு செயற்பாட்டாளர்கள் 03 பேர் தற்கொலை
பாதுகாப்பு தரப்பினரால் கல்முனையில் மேற்கொள்ளபட்ட சுற்றி வளைப்பின் போது தமது 3 செயற்பாட்டாளர்கள் வெள்ளிக்கிழமை குண்டை வெடிக்க வைத்து தற்கொலை செய்து கொண்டமையை ஐ.எஸ் அமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது. ஐ.எஸ். பிரசார பிரிவான அல் அமாக் இணையத்தளம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.. அவர்கள் பாதுகாப்பு தரப்பினருடன் ஒரு மணித்தியாலத்திற்கு மேலாக துப்பாக்கி சூட்டை மேற்கொண்டதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், தோட்டாக்கள் தீர்ந்ததையடுத்து அவர்கள் குண்டுகளை வெடிக்க வைத்து தற்கொலை செய்து …
Read More »தளர்த்தப்பட்ட ஊரடங்கு சட்டம்
நாடு பூராகவும் நேற்று இரவு 10 மணி முதல் அமுல்படுத்தப்பட்ட காவற்துறை ஊரடங்கு சட்டம் இன்று அதிகாலை நான்கு மணியுடன் தளர்த்தப்பட்டுள்ளது. நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைமைகளை கருத்திற் கொண்டு காவற்துறை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தது. இதனிடையே, சம்மாந்துறை, கல்முனை மற்றும் சவலக்கடை ஆகிய காவற்துறை பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் அமுல்படுத்தப்பட்டிருந்த காவற்துறை ஊரடங்கு சட்டம் தொடர்வதாக காவற்துறை ஊடக பேச்சாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது. பாதுகாப்பு அமைச்சி விடுத்துள்ள அதிரடி செய்தி!
Read More »பாதுகாப்பு அமைச்சி விடுத்துள்ள அதிரடி செய்தி!
இனவாதம் அல்லது மதங்களுக்கு இடையில் அமைதியின்மையை ஏற்படுத்த கூடிய வகையில் கருத்துக்கள், புகைப்படங்கள் வெளியிடுதல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சி இவ்வாறு அவதான எச்சரிக்கை விடுத்துள்ளது. இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடும் குழுக்கள் அல்லது அமைப்புக்கள் மீது எவ்வித வேறுபாடுகளுமின்றி நடவடிக்கை எடுக்குமாறு அறிக்கை ஒன்றை வெளியிட்டு குறிப்பிட்டுள்ளது. வெடிப்பு சம்பவங்கள் பதிவாகி இன்றுடன் ஒரு வார காலம் பூர்த்தி
Read More »
Tamilpriyam | Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamil nadu News | Sri Lankan Tamil News Tamil News,Online Tamil News,Tamil News Live,Tamilnadu News,Oneindia Tamil,live tamil news Portal,online tamil news,Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil,all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology,online tamil news, tamil news portal, tamil actors, tamil actresses, astrology news in tamil, chennai news,