நாட்டின் பல பகுதியில் நேற்று இடம்பெற்ற குண்டு வெடிப்புக்களில் உயிரிழந்துள்ள நபர்களின் திடீர் மரண பரிசோதனை நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ளுமாறு நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு திடீர் மரண விசாரணையாளர்களிடம் கோரியுள்ளது. உயிரிழந்தவர்களின் தேகங்களை உடனடியாக உறவினர்களுக்கு ஒப்படைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு திடீர் மரண பரிசோதகர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. LIVE UPDATES : குண்டுவெடிப்பு தொடர்பான செய்திகள்
Read More »வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் கைதான 24 பேர் சி.ஐ.டியில் – பலி எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு
நாட்டில் நேற்றைய தினம் இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட 24 சந்தேக நபர்கள் குற்றப்புலனாய்வு திணைக்களத்தால் தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். இதேவேளை, வெடிப்பு சம்பவங்களால் இதுவரை 290 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர், காவல்துறை அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். இதனுடன் சுமார் 500 பேர் வரையில் காயமடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், தற்போது நாடாளாவிய ரீதியில் தொடர்ந்து சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக …
Read More »குண்டு வெடிப்புக்கள் – தற்கொலை குண்டுத் தாக்குதல் என உறுதி
கொழும்பில், தேவாலயம் மற்றும் விருந்தகங்களில் இடம்பெற்ற குண்டு வெடிப்புக்கள் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அரச பகுப்பாய்வு நிறுவனம் இந்த உறுதிப்படுத்தலை வெளியிட்டுள்ளது. கொழும்பு – கொட்டாஞ்சேனை – கொச்சிக்கடை தேவாலயம் மற்றும் நீர்கொழும்பு – கட்டான – கட்டுவாபிட்டிய தேவாலயம், மற்றும் மட்டக்களப்பு ஸீயோன் தேவாலயம், கொழும்பு சங்ரிலா, கிங்ஸ்பெரி மற்றும் கொள்ளுப்பிட்டியில் உள்ள சினமன் கிரேன்ட் முதலான விருந்தகங்களில் நேற்று காலை 8.45 முதல் 9.30 …
Read More »குண்டு வெடிப்புக்களினால் இதுவரை 290 பேர் பலி
நாட்டில் இடம்பெற்ற குண்டு வெடிப்புக்களினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 290 வரையில் அதிகரித்துள்ளதாக காவற்துறை ஊடக பேச்சாளரும் காவற்துறை அதியகட்சருமான ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். அத்துடன் காயமடைந்தவர்கள் 500 பேர் வரையில் உள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, அரச சேவையாளர்களுக்கு இன்றைய தினம் விடுமுறை வழக்கப்படவில்லை எனவும் அனைவரும் கடமைக்கு சமூகமளிக்க வேண்டும் எனவும் உள்விவகார அமைச்சு தெரிவித்துள்ளது. அரச நிறுவனங்களை தொடந்தும் இயக்கச் செய்வதற்காக அனைத்து அரச பணியாளர்களும் …
Read More »யாழ்ப்பாண பொலிஸாரின் அறிவுறுத்தல்!
பொதுமக்கள் மத்தியில் நடமாடும் புதிய முகம், அறிமுகமற்றவர், சந்தேகத்துக்கு இடமாக கைப்பையை வைத்திருப்போர் தொடர்பில் உடனடியாக அவசர பொலிஸ் இலக்கமான 119 இற்கு அறிவிக்குமாறு யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கேட்டுள்ளார். அறிமுகமற்றவர் உங்கள் பிரதேசத்தில் நடமாடினால் அவரை யார்? என முதலில் விசாரியுங்கள். அதற்கு அவர் மாறுபட்ட தகவல்களை வழங்கினால் பொலிஸ் அவசர பிரிவு இலக்கம் 119 மற்றும் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்துக்கு தகவலை வழங்குங்கள் என்றும் …
Read More »குண்டு வெடிப்பு ; மேலும் இருவர் கைது!
நேற்று இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்களுடன் தொடர்புடைய மேலும் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது. குறித்த இருவரும் தம்புள்ளை நகரில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும், அவர்கள் காத்தான்குடி மற்றும் மாவனல்ல பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸ் ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.
Read More »போக்குவரத்து சேவைகள்
நேற்றைய தினம் மடடுப்படுத்தப்பட்;ட இலங்கை போக்குவரத்துச் சபையின் பஸ் சேவைகள் ,இன்று காலை 6.00 மணி முதல் மீண்டும் ஆரம்பிக்கும் என்று தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் அனைத்துப் பிரதேசங்களுக்கும் பயணிக்கக்கூடிய வகையில் பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படும் என்று இலங்கை போக்குவரத்துச் சபையின் பிரதிப் பொது முகாமையாளர் பி.எச்.ஆர்.ரி.சந்திரசிறி தெரிவித்தார். இதேபோன்று இன்று காலை 6.00 மணி முதல் ரெயில் சேவைகளும் வழமை போன்று இடம்பெறும் என்று …
Read More »பொலிஸ் ஊரடங்கு தளர்த்தப்படுகிறது – பொலிஸ் ஊடகப் பேச்சாளர்
நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்குச்சட்டம் இன்று காலை 6 மணியுடன் தளர்த்தப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். நாட்டில் நேற்றையதினம் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதல்களையடுத்து நாட்டின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் நேற்று மாலை 6 மணி முதல் இன்று காலை 6 மணிவரை பொலிஸாரினால் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டமே இன்று காலை 6 மணியுடன் தளர்த்தப்பட்டுள்ளது. இதேவேளை, நேற்றைய தினம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற 8 தொடர் …
Read More »பாதுகாப்புத் தரப்பு கவனம் செலுத்தாதது பாரதூரமானது
இவ்வாறான மோசமான தொடர்குண்டு தாக்குதல் சம்பவம் இடம்பெறும் அச்சுறுத்தல் ஏற்கனவே விடுக்கப்பட்ட போதும் அதுகுறித்து பாதுகாப்பு தரப்பு கவனம் செலுத்தாதும் , எமக்கு அறியப்படுத்ததும் பாரதூரமான பிரச்சினையாகும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். இந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தின் பின்னணியில் சர்வதேச சக்திகள் உள்ளனவா என்பதை கண்டறிய சர்வதேச பொலிஸ் உதவியை கோருகின்றோம், எமது புலனாய்வு துறையும் இதுகுறித்து ஆராய்ந்து வருகின்றது என்றவும் குறிப்பிட்டார். பிரதமர் ரணில் விக்ரமசிங்க …
Read More »விமான நிலைய வீதியில் மீட்கப்பட்ட வெடிகுண்டால் பரபரப்பு
கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு உள் நுழையும் ஆடி அம்பலம வீதியில் இருந்து பி.வீ.சி. குழாயில் பொருத்தப்பட்டு தயார் செய்யப்பட்ட 6 அடி வரை நீளமான குண்டு விமானப்படையினரால் மீட்கப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது. நேற்றைய தினம் விமான நிலையத்துக்கு காணப்பட்ட அச்சுறுத்தல் நிலைமையை கருத்தில் கொண்டு அதன் பாதுகாப்பு விமானப்படையிடம் ஒப்படைக்கப்பட்டது. இந் நிலையிலேயே விமானப்படையின் நடமாடும் சோதனைப் பிரிவு நேற்று இரவு 10.15 அளவில் சோதனையில் ஈடுபட்டிருந்த போது இந்த …
Read More »
Tamilpriyam | Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamil nadu News | Sri Lankan Tamil News Tamil News,Online Tamil News,Tamil News Live,Tamilnadu News,Oneindia Tamil,live tamil news Portal,online tamil news,Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil,all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology,online tamil news, tamil news portal, tamil actors, tamil actresses, astrology news in tamil, chennai news,