இலங்கை

இலங்கை

பயணிகளுக்கான விசேட பாதுகாப்பு..

பயணிகளுக்கான விசேட பாதுகாப்பு

கட்டுநாயக்க சர்வரேத விமான நிலையை பயன்படுத்தும் விமான பயணிகளுக்கான விசேட பாதுகாப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு விமானப்படை பேச்சாளர் இதனை தெரிவிதுத்துள்ளார். பயணிகளுக்கு ஏற்படும் சிரமத்தை தணிப்பதற்கு இந்த நடவடிக்கை முன்னேடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கைக்கு புதுவிதமான பயங்கரவாத அச்சுறுத்தல்

Read More »

இலங்கைக்கு புதுவிதமான பயங்கரவாத அச்சுறுத்தல்

இலங்கைக்கு

இலங்கைக்கு புதுவிதமான பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு முகங்கொடுக்க நேரிட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளுக்கான இலங்கை நிரந்தர பிரதிநிதி ரொஹான் பெரேரா தெரிவித்துள்ளார். இதற்காக தேசிய பாதுகாப்பு முறைமையை கட்டியெழுப்ப வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பட்டுள்ளார். வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புக்களின் உறுப்பினர்கள் தேச எல்லைகள் ஊடாக உட்பிரவேசிப்பதை தடுப்பதற்கான வேலைத்திட்டம் ஒன்றை ஐக்கிய நாடுகள் சபை கடந்த 7 ஆம் திகதி முன்வைத்தது, அவ்வாறான பயங்கரவாத உறுப்பினர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்காக நாடுகளுக்கிடையில் …

Read More »

ஏதிலிகளை வடக்கில் குடியேற்றுவது வீணான குழப்பத்தை தோற்றுவிக்கும் – சிவாஜிலிங்கம்

சிவாஜிலிங்கம்

பாகிஸ்தான் உள்ளிட்ட ஏதிலிகளை வடக்கு பகுதியில் குடியேற்றுவதானது, மக்கள் மத்தியில் வீணான குழப்பத்தை தோற்றுவிக்கும் என வட மாகாண சபை முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று ஊடகங்கள் மத்தியில் கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை குறிப்பிட்டார். மறைமுகமான முறையில் தொடர்புடையவர்களைக் கண்டறிவதற்கான விசாரணை

Read More »

மறைமுகமான முறையில் தொடர்புடையவர்களைக் கண்டறிவதற்கான விசாரணை

இந்தியா

இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தற்கொலை குண்டுத் தாக்குதல்களுடன், மறைமுகமான முறையில் தொடர்புடையவர்களைக் கண்டறிவதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குறித்த சம்பவத்துடன் நேரடியாக தொடர்புடையவர்கள் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளனர் என ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்கள் தடுப்பு பிரிவின் உயர் அதிகாரிய ஒருவர் குறிப்பிட்டார். இந்த நிலையில், அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், தற்கொலை குண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புடையவர்கள் குறித்து தகவல் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். குறித்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களில் 56 …

Read More »

அச்சுறுத்தல் விடுப்போரின் தொழில்வாய்ப்பை பறிப்பதற்கு நடவடிக்கை

அச்சுறுத்தல்

2015 முதல் 2018 வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற ஊழல், மோசடிகள் குறித்து விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சியாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுமாயின், அச்சுறுத்தல் விடுப்போரின் தொழில்வாய்ப்பு பறிப்பதற்கு நடவடிக்கை எடுக்க முடியும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆணைக்குழுவின் தலைவரான நீதியரசர் உபாலி அபேரத்ன இந்த எச்சரிக்கை விடுத்துள்ளார். மஹரகம அபேக்ஷா மருத்துவமனைக் புற்றுநோய் தடுப்பு ஊசிகளைப் கொள்வனவு செய்வதில் ஏற்பட்ட மோசடி குறித்து பெண் மருத்துவர் ஒருவர் வாக்குமூலம் வழங்கியுள்ளார். …

Read More »

மகிந்த பிரதமருக்கு விடுத்துள்ள கோரிக்கை!

எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஸ ,

நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் எதிர்க்கட்சி கோரியிருந்த விவாதத்தை மூன்றாவது நாளாகவும் நடாத்த இன்று நாடாளுமன்றில் அனுமதி கிடைத்தது. அதன்படி , ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சியினர், நாளைய தினமும் இந்த விவாதத்தை நடத்த ஒருமனதாக தீர்மானித்தனர். இதேவேளை , நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டுள்ள உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பில் விரிவான ஆய்வொன்றிற்கும் மற்றும் விசாரணைக்கும் தெரிவுக் குழுவொன்றை நியமிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஸ , பிரதமரிடம் கோரியிருந்தார். நாடாளுமன்றில் …

Read More »

வேலையின்றி தவிக்கும் சுற்றுலா பேருந்து பணியாளர்கள்

வேலையின்றி

உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தாக்குதல்களால் சுற்றுலாதுறை உள்ளிட்ட பல துறைகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதல்களினால் வெளிநாட்டு பிரஜைகள் 44 பேர் உயிரிழந்த நிலையில், இலங்கை வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை பெருமளவு குறைவடைந்துள்ளது. வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வாராமை காரணமாக 550 மேற்பட்ட சுற்றுலா பேருந்துகள் தரித்து வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை சுற்றுலா பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் நீல் ஜயதிஸ்ஸ எமது செய்தி சேவைக்கு தெரிவித்துள்ளார். …

Read More »

ஐ.தே.கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் கொழும்பிற்கு

பயங்கரவாத அபாயம்

ஐக்கிய தேசிய கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் மற்றும் கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இன்று காலை குறித்த சந்திப்பு கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்றுள்ளது. அந்த சந்திப்பின் போது நாட்டின் தற்போதைய நிலைமை மற்றும் கட்சியின் எதிர்கால செயற்பாடுகள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே தெரிவித்துள்ளார். அத்துடன், நாட்டு மக்களின் பாதுகாப்பு என்பன குறித்தும் இதன்போது ஆராயப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, எதிர்வரும் …

Read More »

சாய்ந்தமருதிற்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி

சுற்றுலா

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தற்போது அம்பாறை – சாய்ந்தமருது பிரதேசத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். ஜனாதிபதியின் இந்த விஜயத்தின் போது, இராணுவத் தளபதி மகேஸ் சேனாநாயக்க உள்ளிட்ட குழுவினரும் பங்கு கொண்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். இந்த கண்காணிப்பு விஜயத்தின் போது, ஜனாதிபதி அங்குள்ள அரச அதிகாரிகள் மற்றும் முஸ்லிம் அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோரை சந்தித்துள்ளார். வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் இரண்டாவது அறிக்கை ஜனாதிபதியிடம்

Read More »

வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் இரண்டாவது அறிக்கை ஜனாதிபதியிடம்

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் ஆராயும் விசாரணை குழுவின் இரண்டாவது இடைக்கால அறிக்கை கிடைக்கப்பெற்றுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இது தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்காக குறித்த அறிக்கை நாளைய தினம் சட்டமா அதிபருக்கு அனுப்பப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது. வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் இரண்டாவது அறிக்கை ஜனாதிபதியிடம்

Read More »