இலங்கை

இலங்கை

தீவிரவாத தாக்குதல் தொடர்பில் வெளியான செய்தி..

இந்தியா

கடந்த 21ஆம் திகதி மேற்கொள்ளப்பட் தீவிரவாத தாக்குதல் தொடர்பில் சவுதி அரேபியா அறிந்திருந்ததாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அல்-அஹெட் இணையத்தளம் இதனை சுட்டிக்காட்டியுள்ளது. சவுதி அரேபிய வௌிவிவகார அமைச்சினால் இலங்கைக்கான சவுதி அரேபியாவின் வௌிவிவகார அமைச்சர் இப்ராஹிம் பின் அப்துல் ஹசீஸ் அல் அசாஃப்-இனால் இலங்கைக்கான சவுதி அரேபியத் தூதுவர் அப்துல் நாசர் அல் ஹரேதிக்கு குறித்த இரகசியக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அல்-அஹெட் இணையத்தளம் சுட்டிக்காட்டியுள்ளது. சவுதி அரேபியாவின் வௌிவிவகார அமைச்சர் …

Read More »

புலனாய்வுத்துறையின் பெயரில் கிளிநொச்சில் துண்டுப் பிரசுரங்கள்!

புலனாய்வுத்துறை

தமிழீழ விடுதலைப் புலிகளின் இலட்சினை மற்றும் புலனாய்வுத்துறையின் பெயரில் அச்சிடப்பட்ட துண்டுப் பிரசுரங்கள் கிளிநொச்சியின் பல இடங்களில் வீசப்பட்டுள்ளன. தமிழ் மக்களை இலக்குவைத்து இலங்கையில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்கள் தமிழ் – முஸ்லிம் உறவைச் சீர்குலைக்கும் நோக்கத்துடன் இடம்பெற்றது என அத்துண்டுப் பிரசுரத்தில் கூறப்பட்டுள்ளது. மேலும், யாழ்ப்பாணத்தில் தாக்குதல்கள் இடம்பெறாமல் தடுப்பதற்கு முன்னாள் போராளிகளின் உதவியை 512 படைகளின் தளபதி கேட்டிருப்பது படையினரின் புலனாய்வுத் துறையின் இயலாத்தன்மையை வெளிக்காட்டுகின்றது எனவும் …

Read More »

வவுனியாவில் நபரொருவர் படுகொலை

வவுனியாவில்

வவுனியா – பூவரசங்குளம் – சாளம்பைக்குளம் பிரதேசத்தில் வீடொன்றில் நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். உந்துருளியில் சென்ற இருவர் நேற்று இரவு, கூரிய ஆயுதத்தின் மூலம் தாக்கி இந்த கொலையை புரிந்துள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். கொலை செய்யப்பட்டவர் 41 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொலை தொடர்பில் இதுவரையில் சந்தேகநபர்கள் அடையாளம் காணப்படவில்லை என காவற்துறையினர் குறிப்பிட்டுள்ளனர். கைதான யாழ் பல்கலை மாணவர்களை விடுவிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை

Read More »

கைதான யாழ் பல்கலை மாணவர்களை விடுவிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை

கைதான யாழ்

விடுதலைப்புலிகள் தொடர்பான ஆவணங்களை வைத்திருந்ததாக குற்றம்சாட்டப்பட்டு கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ள, யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களை உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கோரி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். அவரினால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மாணவர்கள் தமது கல்வி நடவடிக்கைகளைத் தொடராதிருக்கும் வகையில், பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் அவர்களை கைதுசெய்யும் வகையில் …

Read More »

பல்வேறு பிரதேசங்களில் தேடுதல் நடவடிக்கைகள்

தேடுதல் நடவடிக்கைகள்

சந்தேகத்துக்குரியவர்கள் மற்றும் ஆயுதங்கள் என்பன தொடர்பில் நேற்றைய தினம் நாடு முழுவதும் உள்ள பல்வேறு பிரதேசங்களில் தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. இதற்கமைய திக்வெல்ல – யோனகபுர பகுதியில் 2500 சிம் அட்டைகளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். காலி கோட்டை பகுதியில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் ஈயத்தினாலான 669 சிறிய பந்துகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன், பலப்பிட்டிய பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து பழைய காவி உடைகள் உள்ளிட்ட …

Read More »

ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்ட அறிக்கை

ஜனாதிபதியிடம்

முன்னாள் பாதுகாப்பு பிரதானிகளின் தயாரிக்கப்பட்ட நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைமைகள் மற்றும் தேசிய பாதுகாப்பிற்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த முன்மொழிவுகள் உள்ளடங்கிய அறிக்கையை எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் நேற்ற கையளித்தார். குறித்த அறிக்கை எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டிருந்த நிலையில், ஜனாதிபதி செயலகத்தில் வைத்து, குறித்த அறிக்கையை அவர் ஜனாதிபதியிடம் கையளித்துள்ளார். முன்னாள் பாதுகாப்பு பணிக்குழாம் பிரதானி ஜகத் ஜயசூரிய, முன்னாள் …

Read More »

சஹ்ரானின் மனைவி வழங்கிய வாக்குமூலம்..

சஹ்ரானின்

இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் பிரதான சூத்திரதாரியான மொஹமட் சஹ்ரான், கொழும்பின் சில இடங்களில் தங்கியிருந்துள்ளார் என பாதுகாப்புத் தரப்பினர் தகவல் வெளியிட்டுள்ளனர். சாய்ந்தமருதில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் காயமடைந்த அவரின் மனைவியிடம் பெற்றுக்கொள்ளப்பட்ட வாக்குமூலத்தில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது. அம்பாறை மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவரும் அவரிடம், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் வாக்குமூலங்களைப் பதிவுசெய்துள்ளனர். அவரும், சஹரானும் கொழும்பில் சில இடங்களில் முன்னர் தற்காலிகமாக தங்கியிருந்துள்ளனர் என்ற …

Read More »

யாழ்.நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கோட்டாவுக்கு மீண்டும் அழைப்பாணை!

யாழ்

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸவை எதிர்வரும் ஜூன் மாதம் 21ம் திகதி யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு மீண்டும் அழைப்பாணை வௌியிடப்பட்டுள்ளது. கடந்த 2011ம் ஆண்டு டிசம்பர் மாதம் 9ம் திகதி லலித்குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சாட்சி வழங்க முன்னாள் பாதுகாப்பு செயலாளர் இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளார். இன்றைய தினம் குறித்த வழக்கு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் …

Read More »

யாழ்ப்பாணம் நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு

யாழ்ப்பாணம்

இராணுவத்தினரால் நேற்று கைது செய்யப்பட்ட யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோரை எதிர்வரும் 16ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் நேற்றிரவு உத்தரவிட்டது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகம் இராணுவத்தினர், சிறப்பு அதிரடிப்படையினர் மற்றும் காவல்துறையினரால் நேற்றைய தினம் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதன்போது பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அறையிலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் மாவீரர்களின் ஒளிப்படங்கள் என்பன கைப்பற்றப்பட்டன. …

Read More »

யாழில். கைதுசெய்யப்பட்ட மாணவர்களை பயங்கரவாத தடைப்புச் சட்டத்தின்கீழ் தடுத்துவைத்து விசாரிக்க நடவடிக்கை

யாழில்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் எம்.திவாகரன், செயலாளர் எஸ்.கபில்ராஜ் ஆகிய இருவரையும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்துவைத்து விசாரணை நடத்த (DO) பாதுகாப்பு அமைச்சுக்கு கோப்பாய் பொலிஸார் விண்ணப்பித்துள்ளனர். “யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் இன்று சுற்றிவளைப்புத் தேடுதல் முன்னெடுக்கப்பட்டது. இராணுவத்தினர், சிறப்பு அதிரடிப் படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து இந்த நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர். இதன்போது பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மாணவர் ஒன்றியத்தின் அலுவலகம் சோதனையிடப்பட்டது. இதன்போது தமிழீழ …

Read More »