இலங்கை

இலங்கை

அரச தகவல் திணைக்களம் வௌியிட்டுள்ள விசேட அறிக்கை..!

மீண்டும் ஊரடங்கு சட்டம்

தேவையற்ற வதந்திகளாலும் தவறான தொலைபேசி அழைப்பினாலும் ஏமாற வேண்டாம் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கையொன்றை வௌியிட்டு பொதுமக்களிடம் கோரியுள்ளது. தற்போதைய நிலைமை குறித்து சரியான தகவல்களை பாதுகாப்பு பிரிவினர் வழங்கி வருவதாக அதன் பணிப்பாளர் நாலக கலுவெவ மேலும் தெரிவித்தார். இதேவேளை , கிடைக்கும் தகவல்களுக்கு அமைய வீதிகளை மூடி சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட காவற்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளதாக காவற்துறை ஊடக பேச்சாளர் , காவற்துறை அத்தியட்சகர் ருவான் …

Read More »

அனைத்து உதவிகளும் இலங்கைக்கு வழங்கப்படும் – உலகத் தலைவர்கள்

ஜனாதிபதி

தற்போதைய சந்தர்ப்பத்தில் தம்மால் இயலுமான அனைத்து உதவிகளையும் இலங்கைக்கு வழங்குவதாக ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் தொலைபேசி மூலம் உறுதிப்படுத்தியுள்ளனர். ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குடேரெஸ் நேற்று பிற்பகல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு விசேட தொலைபேசி அழைப்பொன்றை ஏற்படுத்தி, உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற துன்பியல் நிகழ்வு குறித்து தனது …

Read More »

இலங்கையில் தாக்குதல் நடத்திய ஐ.எஸ்.தீவிரவாதிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள அனானி

இலங்கையில்

இலங்கையில் தாக்குதல் நடத்திய ஐ.எஸ்.தீவிரவாதிகளை எச்சரித்து, அனானி என்ற சர்வதேச இணைய முடக்கல் குழு செய்தி அனுப்பியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஆங்கிலத்தில் அனோனிமெஸ் என்று அறியப்படும் இந்த குழு வெளியில் புலப்படாமல் செயற்படுவதால், அநாமதேயமான குழு என்று அறியப்படுகிறது. அனானி என்று தமிழில் பெயர்படுத்தப்படும் இந்த குழுவை பல்வேறு தரப்பினரால் இணையவழி தீவிரவாதிகள் என்று விமர்சிக்கின்ற போதும், உலகெங்கிலும் இந்த குழுவுக்கு ஆதரவாளர்கள் பெருகி வருகின்றனர். 2012ம் ஆண்டு …

Read More »

மீண்டும் ஊரடங்கு சட்டம்…!

மீண்டும் ஊரடங்கு சட்டம்

நாடு முழுவதும் இன்றைய தினமும் காவற்துறை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக காவல் துறை ஊடகப்பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார். இதற்கமைய இன்றைய தினம் இரவு 10.00 மணி முதல் நாளை அதிகாலை 4.00 மணி வரை காவற்துறை ஊரடங்கு சட்டம் அமுலில் காணப்படும் என அவர் மேலும் தெரிவித்தார். மீண்டும் ஊரடங்கு சட்டம்,காவற்துறை ஊரடங்கு சட்டம்,ருவன் குணசேகர

Read More »

அவசர கால சட்டத்தை அமுலாக்குவதற்கு நாடாளுமன்றம் அங்கீகாரம்

பயங்கரவாதி

அவசர கால சட்டத்தை அமுலாக்குவதற்கு நாடாளுமன்றம் அங்கீகாரம் வழங்கியுள்ளது. நாட்டின் தற்போதைய சூழ்நிலையை கருத்திற்கொண்டு பயங்கரவாத தடை சட்டத்தின் சரத்துக்களை அவசகால சட்டத்தின் ஊடாக அமுலாக்குவதற்கு ஏலவே தீர்மானிக்கப்பட்டிருந்தது. இதுதொடர்பான யோசனை இன்று நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டது. இதன்போது அவசரகால சட்டத்தை அமுலாக்க நாடாளுமன்றில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. வெடி குண்டுகளை தயார் செய்த தொழிற்சாலை இதுவா? படங்கள்

Read More »

வெடி குண்டுகளை தயார் செய்த தொழிற்சாலை இதுவா? படங்கள்

உயிர்த்த ஞாயிறான கடந்த 21 ஆம் திகதி கொழும்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட குண்டு தாக்குதல்களுக்கு வெடி குண்டுகள் தயார் செய்யப்பட்ட தொழிற்சாலை தொடர்பான புகைப்படங்களை டெய்லி மெய்ல் செய்தி சேவை வெளியிட்டுள்ளது. வெல்லம்பிட்டி பகுதியில் அமைந்துள்ள செப்பு தொழிசாலையிலேயே குறித்த தாக்குதல்களுக்கான வெடி குண்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளதாக அந்த செய்தி சேவை சுட்டிக்காட்டியுள்ளது. அத்துடன் குறித்த தொழிற்சாலையில் கடமையாற்றிய முகாமையாளர் உள்ளிட்ட ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, …

Read More »

மற்றுமொரு உந்துருளி படையினரால் வெடிக்க வைக்கப்பட்டது!!

மற்றுமொரு

புறக்கோட்டை ஜந்து லாம்பு சந்தியில் உந்துருளியொன்று பாதுகாப்பு படையினரால் வெடிக்க வைக்கப்பட்டுள்ளது. சந்தேகத்திற்கு இடமான முறையில் காணப்பட்ட உந்துருளியை சோதனையிட்ட பாதுகாப்பு படையினர் குறித்த உந்துருளியை இவ்வாறு வெடிக்க வைத்துள்ளனர். சுமார் ஒரு மணித்தியாலத்திற்கும் அதிகமாக குறித்த பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான முறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த குறித்த உந்துருளி சோதனையிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்தே குறித்த உந்துருளி பாதுகாப்பு படையினரால் வெடிக்க வைக்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். …

Read More »

பொது மக்களுக்கான வானிலை முன்னறிவிப்பு

பொது மக்களுக்கான

தென் மேற்கு வங்காள விரிகுடா கடற்பகுதியில் இலங்கைக்கு தென்கிழக்கில் குறைந்த அழுத்தப் பிரதேசம் உருவாகக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. இதன் காரணமாக கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் குறித்து அவதானத்துடன் செயற்படுமாறு அந்த நிலையம் வௌியிட்டுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் , நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இன்று பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய …

Read More »

சந்தேகத்திற்கிடமான இரு உந்துருளிகள் பரிசோதனையில்

மேலும் இருவர் கைது

காவல்துறை தலைமையகத்திற்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சந்தேகத்திற்கிடமான உந்துருளியொன்றும், புறக்கோட்டை – முதலாம் குறுக்கு வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சந்தேகத்திற்கிடமான உந்துருளியொன்றும் தற்சமயம் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. காவல்துறை அவசர தொலைபேசி இலக்கத்திற்கு வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய காவல்துறை அதிகாரிகள் அவற்றை பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.

Read More »

முக்கிய தகவல்களை வழங்க தொலைபேசி இலக்கங்களை அறிமுகப்படுத்திய இராணுவம்

முக்கிய

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பாதுகாப்பு நிலைமைகளைக் கருத்திற்கொண்டு, தீவிரவாத செயற்பாடுகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய சந்தேகத்துக்குரிய நபர்கள் மற்றும் வாகனங்கள் தொடர்பில், பொதுமக்கள் தகவல்களை வழங்குவதற்காக தொலைபேசி இலக்கங்களை இராணுவம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கமைய, 0112 43 42 51 அல்லது 011 40 55 105 அல்லது 011 40 55 106 முதலான தொலைபேசி இலக்கங்கள் ஊடாக இராணுவத் தலைமையகத்தின் குண்டு செயலிழப்பு பிரிவை தொடர்பு கொண்டு தகவல் …

Read More »