இலங்கையில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலுக்கு ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை கண்டம் வெளியிட்டுள்ளது.
Read More »ஊரடங்கு சட்டம் நீக்கம்
நாடு முழுவதும் நேற்று இரவு 08 மணி முதல் அதிகாலை 04 மணி வரை அமுல்ப்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் நீக்கி கொள்ளப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது. LIVE UPDATES : குண்டுவெடிப்பு தொடர்பான செய்திகள்
Read More »இலங்கைக்கு உதவ மோடி முன்வந்துள்ளார்
சர்வதேச நாடுகளின் உதவியை அந்நாட்டின் அதிபர் மைத்ரிபால சிறிசேனே எதிர்பார்க்கலாம் எனக் கூறப்பட்ட நிலையில், இந்தியப் பிரதமர் மோடி உதவுவதாகத் தெரிவித்துள்ளார். இலங்கைக்குத் தேவையான அத்தனை உதவிகளையும் வழங்கத் தயார் என மோடி தன்னுடனான தொலைபேசி உரையாடலில் தெரிவித்தார் என இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனே தெரிவித்துள்ளார். இலங்கையில் தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்கள் சர்வதேச அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. 200-க்கும் மேற்பட்டவர்கள் குண்டுவெடிப்பில் பலியாகி உள்ளனர். 500-க்கும் மேற்பட்டோர் …
Read More »குண்டுவெடிப்புக்கு அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஒபாமா கண்டனம்
இலங்கை குண்டுவெடிப்புக்கு அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவும் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். #Colomboblast #Obama #SriLankaAttack இலங்கையின் கொழும்பு நகரில் உள்ள தேவாலயங்கள் மற்றும் ஓட்டல்கள் என பல்வேறு இடங்களில் நேற்று முன்தினம் தொடர் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன. இதில் சுமார் 300 பேர் உயிரிழந்ததுடன், ஏராளமானோர் படுகாயங்களுடன் மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஈஸ்டர் பெருநாளில் இலங்கையை உலுக்கி உள்ள இந்த சம்பவத்துக்கு உலக நாடுகள் கண்டனம் …
Read More »இலங்கைக்கு ஒத்துழைப்பினை வழங்க முன்வந்துள்ள சர்வதேச காவல்துறை
நேற்று இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கு இலங்கைக்கு ஒத்துழைப்பினை வழங்க சர்வதேச காவல்துறை முன்வந்துள்ளது. சர்வதேச காவல்துறையின் செயலாளர் நாயகம் ஜூர்கன் ஸ்ரொக் இதனை தெரிவித்துள்ளார். டுவிற்றர் தளத்தின் ஊடாக அவர் இதனை தெரிவித்துள்ளதுடன், மரணித்த மக்களின் உறவுகளுக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களையும் வெளிப்படுத்தியுள்ளார்.
Read More »உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு
நாட்டின் 8 இடங்களில் நேற்றைய தினம் இடம்பெற்ற குண்டு வெடிப்புக்களினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 291 ஆக அதிகரித்துள்ளது. காவற்துறை ஊடக பேச்சாளரும் காவற்துறை அதியகட்சருமான ருவான் குணசேகர இதனை தெரிவித்துள்ளார். அத்துடன் 500க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பு தேசிய மருத்துவமனையில் தற்போது வரை 115 பேர் தொடந்தும் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை தகவல்கள் தெரிவித்துள்ளன. அவர்களில் 25 பேர் அவசர சிகிச்சை பிரிவில் பெற்று …
Read More »கொழும்பு தனியார் பேருந்து தரிப்பிடத்தில் வெடிப்பொருட்கள் மீட்பு
கொழும்பு புறக்கோட்டை பெஸ்டியன் மாவத்தையில் உள்ள தனியார் பேருந்து தரிப்பிடத்தில் வெடிப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. குப்பை பை ஒன்றில் இருந்து 87 டெட்டனேட்டர்கள் மீட்கப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடக பேச்சாளரும் காவற்துறை அதியட்சகருமான ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
Read More »காவற்துறை மற்றும் இராணுவத்திற்கு வழங்கப்படவுள்ள அதிகாரம்..
பயங்கரவாத ஒழிப்பு குறித்த சரத்தினை மாத்திரம் இன்று நள்ளிரவு முதல் அவசரகால சட்ட ஒழுங்குமுறையின் கீழ் வர்த்தமாணி அறிவிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நாடு மற்றும் மக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தவதற்காக காவற்துறை மற்றும் இராணுவத்திற்கும் அதிகாரத்தினை வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
Read More »குண்டு வெடித்த சங்ரில்லா ஹோட்டலுக்கு பூட்டு
மறு அறிவித்தல் வரை கொழும்பு ஷங்ரில்லா ஹோட்டல் மூடப்பட்டுள்ளதாக ஹோட்டல் முகாமைத்துவம் தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் அங்கு இரண்டு தற்கொலை குண்டு தாக்குதல்கள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது
Read More »நாளை தேசிய துக்க தினம்
நாளைய தினத்தை(23) தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இன்று காலை ஜனாதிபதி தலைமையில் கூடிய பாதுகாப்பு சபை கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Read More »