இலங்கை

இலங்கை

ஏதிலிகளாக மீண்டும் சிலர் படகுகளில் செல்ல ஆரம்பம்

அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவில் ஆட்சி மாற்றம் ஒன்று ஏற்படும் என்ற எதிர்பார்ப்பிலேயே இலங்கையில் இருந்து ஏதிலிகளாக மீண்டும் சிலர் படகுகளில் செல்ல ஆரம்பித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அவஸ்திரேலிய ஊடகம் ஒன்று இதனைத் தெரிவித்துள்ளது. ஆளும் லிபரல் கட்சியின் அரசாங்கமே ஏதிலிகளுக்கு எதிரான கடுமையான சட்டங்களை அமுலாக்கியுள்ளது. இதனால் படகுமூலம் செல்கின்றவர்கள் உடனடியாக திருப்பி அனுப்பப்படுவதுடன், அரசியல் அந்தஸ்த்து கோரி விண்ணப்பிக்கின்றவர்கள் நீண்டகாலத்துக்கு தடுத்து வைக்கப்படுகின்றனர். அண்மையில் அங்கு நடைபெற்ற தேர்தலில் தொழில்கட்சி வெற்றி பெற்றால், …

Read More »

உளவாளிகளின் அடையாளத்தை வௌிப்படுத்துவது தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்

உளவாளிகளின்

புலனாய்வுப் பிரிவுகளுக்கு தகவல்களை வழங்கும் உளவாளிகளின் அடையாளத்தை வௌிப்படுத்துவது தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாகும் என எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். நேற்று தங்காலையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.

Read More »

வௌிநாட்டு கடவுச்சீட்டு கட்டணங்கள் மறுசீரமைக்கப்பட்டுள்ளன

கடவுச்சீட்டு

2019 ஆம் வருடத்திற்கான நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பாதீட்டு யோசனைக்கு அமைய வௌிநாட்டு கடவுச் சீட்டு வௌியீட்டின் போது அறவிடப்படும் கட்டணம் நாளை தொடக்கம் மறுசீரமைக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அதன்படி , 3000 ரூபாவாக காணப்படும் சாதாரண சேவை கட்டணம் 3500 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கடவுச்சீட்டு வௌியிடப்படும் போது 10 ஆயிரம் ரூபாவாக காணப்பட்ட ஒருநாள் சேவை கட்டணம் 15 ஆயிரம் ரூபாவரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் …

Read More »

மோடியை சந்தித்துள்ள ஜனாதிபதி

மோடியை சந்தித்துள்ள ஜனாதிபதி

இரண்டாவது தடவையாக இந்தியாவின் பிரதமர் பதவியை ஏற்றுள்ள நரேந்திர மோடியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று சந்தித்துள்ளார். ஐதாபாத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது இருநாட்டு உறவுகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்திய பிரதமராக இரண்டாவது தடவையாகவும் நரேந்திரமோடி பதவி ஏற்கும் நிகழ்வில் கலந்துக் கொள்வதற்காக ஜனாதிபதி தலைமையில், அமைச்சர்களான மனோகணேசன், ரவுப் ஹக்கீம் ஆகியோருடன், நாடாளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமான் உள்ளிட்டவர்களும் …

Read More »

திருப்பி அனுப்பப்பட்டுள்ள புகழிடக்கோரிக்கையாளர்கள்

அவுஸ்திரேலியா

படகுமூலம் அவுஸ்திரேலியாவுக்கு பயணித்த 20 இலங்கை புகழிடக்கோரிக்கையாளர்கள், அந்நாட்டு அதிகாரிகளினால் இடைமறிக்கப்பட்டு மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். அவுஸ்திரேலிய கடலோர பாதுகாப்பு அதிகாரிகளை மேற்கோள்காட்டி அந்நாட்டு ஊடகங்கள் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளன. குறித்த இலங்கை புகழிடக்கோரிக்கையாளர்கள், நடுக்கடலில்வைத்து இடைமறிக்கப்பட்டு, கிறிஸ்மஸ்தீவுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். கடற்படையினரால் மீட்கப்பட்டவர்களில் ஒரு குழந்தையும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மே மாத முற்பகுதியில் இலங்கையிலிருந்து புறப்பட்டதாக கருதப்படும் குறித்த படகு அவுஸ்திரேலிய கடற்படையினரால் கடந்தவாரம் இடைமறிக்கப்பட்டிருக்கலாம் என்று …

Read More »

சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை மேற்கொண்டிருக்கவில்லை

சம்பந்தப்பட்டவர்கள்

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலுக்கு முன்னர் இரண்டு மாதங்களாக பாதுகாப்புச் சபையின் கூட்டம் இடம்பெறாமை பாரிய பிரச்சினைக்குரியதாகும் என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். தங்காலை – கால்டன் இல்லத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது ஊடகங்களிடம் கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இரண்டு மாதங்களாக பாதுகாப்புச் சபையின் கூட்டம் இடம்பெறாமலிருந்தது பாரிய தவறாகும். இந்த விடயத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும், தலைவர்களும் உரிய முறையில் செயற்பட்டிருக்கவில்லை. எவ்வாறிருப்பினும், …

Read More »

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் அறிந்திருக்கவில்லை – ஜனாதிபதி மீண்டும் தெரிவிப்பு!

ஜனாதிபதியை

கடந்த ஏப்ரல் 8ம் திகதி சிரேஷ்ட காவற்துறை அதிகாரிகளின் கூட்டத்தின் போது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தனக்கு அறிவிக்கப்பட்டதாக வௌியாகியுள்ள செய்தியை நிராகரிப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் கணக்கில் பதிவொன்றை மேற்கொண்டு ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார். தனக்கு அவ்வாறு எவ்வித அறிவிப்புக்களும் மேற்கொள்ளப்படவில்லை என ஜனாதிபதி இதன் போது குறிப்பிட்டுள்ளார்.

Read More »

கிளிநொச்சியில் இன்று மாலை வாள்வெட்டுக் கும்பல் அடாவடி

கிளிநொச்சியில்

கிளிநொச்சி, செல்வாநகர் பகுதியில் இன்று (29) மாலை இடம்பெற்ற வாள்வெட்டுக் கும்பலின் தாக்குதலில் 9 பேர் படுகாயமடைந்துள்ளனர். ஒரு கர்ப்பிணிப் பெண் உட்பட 6 பெண்களும், 3 ஆண்களும் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். சம்பவம் இடம்பெற்ற பகுதியில் உள்ள வீடுகள் இரத்தத்தால் தோய்ந்து காணப்படுகின்றன. பட்டா ரக வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் முகமூடி அணிந்து வாள்களுடன் வந்த 15 இற்கும் மேற்பட்டவர்கள் வீடுகளுக்குள் …

Read More »

விசேட தெரிவுக்குழுவின் சாட்சி விசாரணைகள் இன்று

விசேட தெரிவுக்குழுவின் சாட்சி

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பில் ஆராய்ந்து நாடாளுமன்றில் அறிக்கை சமர்ப்பிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள விசேட தெரிவுக்குழுவின் சாட்சி விசாரணைகள் இன்று ஆரம்பமாகின. நாடாளுமன்ற குழு அறை இலக்கம் 3இல் இன்று முற்பகல் ஆரம்பமான தெரிவுக்குழுவின் சாட்சி விசாரணைகளை அறிக்கையிட ஊடகங்களுக்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. இந்த தெரிவுக்குழுவில், பாதுகாப்புச் செயலாளர் சாந்த கோட்டேகொட முதலாவது நபராக சாட்சியமளித்தார். தெரிவுக்குழுவின் தலைவரான பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறியினால், பாதுகாப்புச் செயலாளரிடம் சாட்சி விசாரணைகள் …

Read More »

பெண்கள் உட்பட ஐவர் காயம்…

பெண்கள்

முல்லைத்தீவு – மாங்குளம் பகுதியில் நேற்று இரவு, வீடொன்றுக்குள் வீடு புகுந்து, வாள் வெட்டு குழுவினர் நடத்திய தாக்குதலில் பெண்கள் உட்பட ஐவர் காயமடைந்ததாக எமது செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்கள் மாங்குளம் வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், குறித்த வீட்டில் இருந்த பொருட்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதுடன், சில பொருட்களை குறித்த குழுவினர் களவாடி சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மாங்குளம் காவற்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.

Read More »