இலங்கை

இலங்கை

பயங்கரவாத தாக்குதலுக்கு காரணம்

பயங்கரவாத தாக்குதலுக்கு காரணம்

நாட்டின் பாதுகாப்பு பிரிவு, குழுவாக செயற்படாத காரணத்தினாலேயே பயங்கரவாத தாக்குதலுக்கு நாடு முகம் கொடுக்க நேர்ந்ததாக அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நுவரெலியா – கெலகொல பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார். நாட்டை பாதுகாக்க வேண்டிய கடமை பாதுகாப்பு தரப்புக்கே உள்ளது. பாதுகாப்புத் தரப்பின் தலைமைகளுக்கு இடையில் பிணக்குகள் இருந்தால், குழுவாக செயற்பட முடியாத நிலைமை ஏற்படும். காவற்துறை மா அதிபர், பயங்கரவாத தடுப்பு பிரிவிற்கோ, …

Read More »

பாரவூர்தியுடன் மோதுண்ட உந்துருளி..

பாரவூர்தியுடன்

ஹொரன – பெல்லபிடிய பிரதேசத்தில் நேற்றைய தினம் பாரவூர்தி மற்றும் உந்துருளி நேருக்கு நேர் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் உந்துருளியாளர் உயிரிழந்துள்ளார். உந்துருளியாளர் மற்றும் ஓர் வாகனத்தினை முன்னோக்கி செல்ல முற்பட்ட போது பாரவூர்தியுடன் மோதுண்ட குறித்த விபத்து நேர்ந்துள்ளது.

Read More »

அவநம்பிக்கை பிரேரணை ஆதரித்து வாக்களிக்கவிருப்பதாக சிவசக்தி ஆனந்தன் தெரிவிப்பு

அவநம்பிக்கை பிரேரணை

அமைச்சர் றிசாட் பதியுதீன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணை ஆதரித்து வாக்களிக்கவிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். எமது செய்தி சேவைக்கு வழங்கிய விசேட செவ்வியில் அவர் இதனைக் கூறியுள்ளார். முதலில் அமைச்சர் றிசாட் பதியுதீன் தமது பதவியில் இருந்து விலகி, அவர் மீதான விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று சிவசக்தி ஆனந்தன் கோரினார். எனினும் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படுமிடத்து, அவருக்கு எதிரான அவநம்பிக்கை …

Read More »

தேசிய அடையாள அட்டையை பெற்று வட்டிக்கு பணம் வழங்கியவருக்கு நேர்ந்த கதி

தேசிய அடையாள அட்டை

வெலிமடை – திமுத்துகமவில் ஒரு தொகை தேசிய அடையாள அட்டைகளுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து 51 தேசிய அடையாள அட்டைகள் மீட்கப்பட்டுள்ளதோடு, சந்தேக நபர் வட்டிக்கு பணம் வழங்குபவர் என காவல்துறை தெரிவித்துள்ளது. அதே பகுதியை சேர்ந்த 48 வயதான நபரே கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வட்டிக்கு பணம் கொடுக்கும் போது பிணையாக தேசிய அடையாள அட்டைகள் பெறப்படுவதாக, சந்தேக நபர் விசாரணைகளில் தெரிவித்துள்ளார்.

Read More »

இலங்கை படையினரை பாரட்டியுள்ள அமைச்சர் கபீர் ஹாசிம்

இலங்கை

பயங்கரவாதத்தை முழுமையாக கட்டுப்படுத்த எந்த நாட்டுக்கும் முடியாது போயுள்ள சூழ்நிலையில், இலங்கையின் படையினர் இரண்டு வாரங்களில் பயங்கரவாத்தை சிறப்பாக முகாமை செய்துள்ளனர் என்று அமைச்சர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார். கலிகமுவ பகுதியில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார். தற்கொலை தாக்குதல்கள் இடம்பெற்ற இரண்டு வாரங்களிலேயே தாக்குதல்தாரிகளுடன் சம்மந்தப்பட்ட முக்கியமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பயங்கரவாத செயற்பாடுகள் மேலும் நடைபெறாதிருக்கும் பொருட்டு சிறப்பான முகாமையை படையினர் மேற்கொண்டுள்ளனர். இது பாராட்டுக்குரியதாகும் என்று அவர் …

Read More »

ஸ்டாலினை இலங்கைக்கு அழைத்துள்ள விக்னேஸ்வரன்

ஸ்டாலினை

இலங்கையின் இறுதி யுத்தத்தின்போது திராவிட முன்னேற்றக் கழகம் செயற்பட்டவிதம் தொடர்பில் தமிழ் மக்களிடையே ஏற்பட்டுள்ள ஏமாற்றத்தையும், கசப்புணர்வையும் போக்கும் வகையில் கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் செயற்படுவார் எனத் தான் நம்புவதாக வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றிபெற்றுள்ள நிலையில், மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பி வைத்துள்ள வாழ்த்துச் செய்தியில் விக்னேஸ்வரன் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையில் இறுதி யுத்தம் நடைபெற்றகாலப்பகுதியில் திராவிட முன்னேற்றகழகம் செயற்பட்டவிதம் …

Read More »

ஜனாதிபதியை சந்தித்த முஸ்லிம் அமைச்சர்கள்

ஜனாதிபதியை

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முஸ்லிம் அமைச்சர்கள் சிலருக்கும் இடையே நேற்றைய தினம் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில், முஸ்லிம்கள் முகம் கொடுத்துள்ள பல பிரச்சினைகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டதாக அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் எமது செய்தி பிரிவிடம் தெரிவித்துள்ளார். முஸ்லிம் ஆசிரியர்கள், அரசாங்க அதிகாரிகள், பாடசாலைகள் மற்றும் பணி இடங்களுக்கு வரும் வேளையில் பயன்படுத்தும் ஆடைகள் தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினை தொடர்பில் இதன்போது ஜனாதிபதியின் …

Read More »

சிங்கள மொழி சாட்சி பிரதியை தமிழுக்கு மொழிபெயர்த்து மன்றில் சமர்ப்பிக்குமாறு உத்தரவு

சிங்கள மொழி

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கின் சிங்கள மொழியில் இருந்த காவல்துறை அதிகாரியின் சாட்சியின் பிரதியை தமிழுக்கு மொழிபெயர்த்து மன்றில் சமர்ப்பிக்குமாறு யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, நீதவான் பீற்றர் போல் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். பல்கலைக்கழக மாணவர்கள் வி.சுலக்சன், ந.கஜன் ஆகியோர் காங்கேசன்துறை வீதி கொக்குவில் குளப்பிட்டியில் வைத்து கடந்த 2016 ஆம் ஆண்டு ஒக்ரோபர் …

Read More »

பொதுமக்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

LIVE UPDATES : குண்டுவெடிப்பு தொடர்பான செய்திகள்

ஏப்ரல் 21 இல் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத் தெரிவுக்குழு, தாக்குதல் சமபவம் தொடர்பில் பொதுமக்களிடம் தகவல்களைக் கோரியுள்ளது. அரசாங்கத் தகவல் திணைக்களம் நேற்று மாலை வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதல் சம்பவம் தொடர்பான புலனாய்வுத் தகவல்கள், சட்டத்தை அமுல்படுத்தும் அதிகாரிகளுக்கு அதற்கு முன்னரே கிடைத்திருந்ததா என்றும், தாக்குதல்களைத் தடுப்பதற்கு அதிகாரிகள் போதியளவில் நடவடிக்கை மேற்கொண்டார்களா என்பது குறித்தம் தகவல்கள் …

Read More »

உயர்நீதிமன்றத்தின் கருத்தைக் கோருவதற்கு தீர்மானம்.

உயிர்த்த ஞாயிறு

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் உயர்நீதிமன்றத்தின் கருத்தைக் கோருவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. அடுத்த வாரம் இடம்பெறவுள்ள ஆணைக்குழுவின் கூட்டத்தில் இது குறித்தும், தேர்தலை நடத்துவதற்கான காலம் தொடர்பிலும் சட்ட நிபுணர்களுடன் ஆராயவுள்ளதாக ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். 9 மாகாண சபைகளில் ஊவா மாகாண சபை தவிர்ந்த ஏனைய 8 மாகாண சபைகளின் அதிகார காலம் நிறைவடைந்துள்ளது. இந்த நிலையில், மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துவதற்கு உள்ள …

Read More »