எத்தியோப்பியா வெளியிட்ட வரைபடத்தில் சோமாலியா காணாமல் போனது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. தாங்கள் தயாரித்த வரைபடத்தில் பக்கத்து நாடான சோமாலியாவை தங்கள் நாட்டோடு சேர்த்து கொண்டதற்காக எத்தியோப்பியா வெளியுறவுத் துறை அமைச்சகம் மன்னிப்பு கேட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட குழப்பத்திற்காக ஓர் அறிக்கை வெளியிட்டு மன்னிப்பு கேட்டு கொண்டுள்ளது அந்நாடு. அந்த வரைப்படத்தில், சோமாலியா இல்லாத அதே நேரம், உலகம் அங்கீகரிக்காத சோமாலிலாண்ட் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Read More »அவுஸ்திரேலியா செல்ல முயற்சித்த 29 பேர் விளக்கமறியலில்
சட்டவிரோதமாக கடல் வழியாக அவுஸ்திரேலியாவிற்கு செல்ல முயற்சித்த போது கைது செய்யப்பட்ட 41 பேரில், 8 சிறுவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களை இன்று மாலை காலி பிரதான நீதவான் ஹர்சன கெக்குனுவெல முன்னிலையில் பிரசன்னப்படுத்திய போதே நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். இதனுடன் அதிலிருந்த 4 பெண்கள், தலா ஒரு லட்சம் ரூபாய் சரீர பிணையில் விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். எனினும் எஞ்சிய 29 ஆண்களையும் அடுத்த மாதம் 6 …
Read More »நைஜீரியாவில் போகோ ஹராம் பயங்கரவாதிகள் தாக்குதல் – 25 வீரர்கள் பலி
நைஜீரியாவில் போகோ ஹராம் பயங்கரவாத அமைப்பினர் நடத்திய தாக்குதலில் 25 ராணுவ வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் சில ஆண்டுகளாக நைஜீரிய அரசினை எதிர்த்து போகோ ஹராம் பயங்கரவாதிகள் வன்முறை செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த அமைப்பின் தற்கொலை படையினர் நடத்திய தாக்குதல்களில் 20,000 பேர் உயிரிழந்துள்ளனர். 2 மில்லியன் மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர். இந்நிலையில் நைஜீரியாவின் வடகிழக்குப் பகுதியில் உள்ள ராணுவ தளம் அருகில் போகோ …
Read More »இலங்கைக்கான சுற்றுலா தடையை தளர்த்திய சீனா!
பயங்கரவாத தாக்குதலை அடுத்து சீன நாட்டவர்கள் இலங்கைக்கு சுற்றுலா மேற்கொள்வதற்கு சீன அரசாங்கம் விதித்திருந்த தடை தளர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாத்துறை மற்றும் கிறிஸ்தவ மத அலுவல்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்கவுக்கும், இலங்கைக்கான சீன தூவருக்குமிடையில் நடைபெற்ற பேச்சுவார்தையின் போது இந்தவிடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கான சுற்றுலாவைத் தவிர்க்குமாறு சீனா ஆரம்பத்தில் அறிவித்திருந்தது. தற்பொழுது இலங்கைக்கான சுற்றுலாவின்போது அவதானத்துடன் செயற்படுமாறு சீனா அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு இலங்கை சுற்றுலாத் தொழில் துறைக்கு சிறந்ததொரு …
Read More »பிரித்தானிய எதிர்கட்சி இலங்கைக்கு வலியுறுத்தல்
இலங்கை அரசாங்கம் தமது பொறுப்புக்கூறும் கடமையை நிறைவேற்ற வேண்டும் என்று பிரித்தானிய எதிர்கட்சியான தொழில்கட்சி வலியுறுத்தியுள்ளது. இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்டவர்களை நினைவு கூறும் பத்தாவது நினைவாண்டை முன்னிட்டு, தொழிற்கட்சியின் தலைவர் ஜெரமி கோபனினால் வெளியாக்கப்பட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழில்கட்சி எதிர்காலத்தில் பிரித்தானியாவில் ஆட்சி அமைக்கும் போது, தமிழர்களுக்கு நீதி கிடைக்கவும், இலங்கையில் தமிழர்கள் சுயஅபிலாசைகளும் உரிமைகளும் பெற்று வாழ்வதையும் உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் …
Read More »வன்முறைகளுக்கான காரணத்தை வௌிப்படுத்திய சர்வதேச மன்னிப்பு சபை
இலங்கையில், குற்றத்தொடர்புடையவர்களுக்கு தண்டனை வழங்கப்படாமையே அண்மைக்கால வன்முறைகளுக்கான காரணம் என்று சர்வதேச மன்னிப்பு சபை சுட்டிக்காட்டியுள்ளது. யுத்தம் நிறைவடைந்து ஒரு தசாப்தம் கடந்துவிட்ட போதும், அரசாங்கம் சர்வதேசத்திடம் வழங்கிய உறுதிமொழிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள் நாட்டில் தொடர்ந்தும் இடம்பெறுகின்றமை கவலையளிக்கிறது. சர்வதேச சட்டங்கள், மனித உரிமைகள் சட்டங்கள் என்பனவற்றை மீறியும், துஸ்பிரயோகங்கள் ஊடாக குற்றங்களைப் புரிந்தவர்கள் பொறுப்புக்கூறல் மூலம் தண்டிக்கப்பட வேண்டும். ஆனால் அவ்வாறு அல்லாது குற்றவாளிகள் …
Read More »கருத்துக்கணிப்புகளை தவிடுபொடியாக்கி ஆளுங்கட்சி மீண்டும் வெற்றி
ஆஸ்திரேலியா தேர்தலில் கருத்துக்கணிப்புகளை தவிடுபொடியாக்கி ஆளுங்கட்சி மீண்டும் வெற்றிபெற்றுள்ளது. ஆஸ்திரேலியாவில் நேற்று நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. ஆஸ்திரேலியாவில் பிரதமர் ஸ்காட் மோரிசன் தலைமையிலான லிபரல் கட்சி தேசிய கூட்டணியின் ஆட்சி நடந்து வருகிறது. இங்கு ஏற்கனவே பிரதமராக இருந்து வந்த மால்கம் டர்ன்புல் கட்சியினால் நீக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து கடந்த 9 மாதங்களாக ஸ்காட் மோரிசன் பிரதமராக இருந்து வருகிறார். இந்த நிலையில் 151 இடங்களைக் கொண்ட அந்த நாட்டின் …
Read More »தாலிபன்களுக்கு பணம் கொடுக்க விரும்பிய அமெரிக்க அரசு
தன்னுடன் அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்காக தலிபான் தீவிரவாதிகள் செலவழித்த பணத்தை திரும்ப வழங்குவதற்கு அமெரிக்க அதிபர் டிரம்பின் நிர்வாகம் விரும்பியதாக அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் உதவியாளர் தெரிவித்துள்ளார். அமைதி பேச்சுவார்த்தையில் பங்கேற்ற தாலிபன்களின் உணவு, தங்குமிடம் உள்ளிட்ட செலவுகளுக்கான பணத்தை அவர்களுக்கு திரும்ப வழங்குவதற்கு அமெரிக்க அரசின் குழுவொன்று மறுப்புத் தெரிவித்துவிட்டதாக அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரது செய்தித் தொடர்பாளர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார். தீவிரவாதிகளுக்கு ஆதரவான செயல்பாடாக இது …
Read More »இலங்கை தமிழ் குடும்பத்தை காப்பாற்ற போராடும் ஆஸ்திரேலிய மக்கள்
ஆஸ்திரேலியாவின் சட்டத்தை மீறி அகதிகளாக வந்த இலங்கை தமிழர் குடும்பத்தினரை வெளியேற்றும் அரசின் முடிவுக்கு எதிராக ஆஸ்திரேலிய மக்களே போராடி வருவது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. நடேஷ் மற்றும் பிரியா இலங்கையிலிருந்து அகதிகளாக 2012ம் ஆண்டு ஆஸ்திரேலியா தப்பி வந்து அகதிகள் முகாமில் வாழ்ந்து வந்தனர். இருவருக்கும் காதல் ஏற்பட்டு திருமணமும் செய்து கொண்டனர். தற்போது நான்கு வயது மற்றும் இரண்டு வயதில் இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். பிறகு …
Read More »சிறுபான்மையினரை பாதுகாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தல்
வன்முறைகளுக்கு உள்ளாக்கப்படும் சிறுபான்மையினரை பாதுகாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்தியுள்ளது. அதன் அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் இலங்கையில் நடத்தப்பட்ட தற்கொலைகுண்டுத் தாக்குதல்களை அடுத்து இலங்கையில் வன்முறைகள் பதிவாகி உள்ளன. அரசாங்கம் சிறுபான்மையினரின் உரிமைகள் பாதிக்கப்படாத வகையில், நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று சர்வதேச மன்னிப்பு சபையின் அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. கடந்த தினங்களில் நாட்டின் சில இடங்களில் வன்முறைகள் …
Read More »