கொழும்பில் களமிறங்கும் தமிழரசுக்கட்சி!
பொதுத்தேர்தலில் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியில் போட்டியிடுவது தொடர்பில் இன்று நடைபெற்ற இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்திலும் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
தமிழரசுக்கட்சியின் மத்தியசெயற்குழுக் கூட்டம் பாராளுமன்ற உறுப்பினர்களான இரா. சம்பந்தன், மாவை சேனாதிராஜா ஆகியோர் தலைமையில் இன்று கிளிநொச்சியில் நடைபெற்றது.
இதன்போது பொதுத்தேர்தலில் போட்டியிடும் விதம் பற்றி கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதன்படி புதுமுகங்களுக்கு வாய்ப்பளிக்க தீர்மானித்துள்ள தமிழரசுக்கட்சி, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மாவட்டந்தோறும் பெண் வேட்பாளர்களை நிறுத்தவும் தீர்மானித்துள்ளது.
அதேவேளை, வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியில் போட்டியிடுவதற்கான சாத்தியப்பாடுகள் குறித்தும் கொழும்பு மாவட்டத்தில் வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது சம்பந்தமாகவும் ஆராயப்பட்டுள்ளது.
கொழும்பு மாவட்டத்தில் தமிழ்ப் பாராளுமன்ற பிரதிநிதித்துவமொன்று இருக்கின்றது. எனவே, மனோ கணேசனுடன் இது சம்பந்தமாக அடுத்தவாரமளவில் பேச்சுவார்த்தை நடத்தப்படும்.” என்று கூட்டணியின் ஊடகப்பேச்சாளர் சுமந்திரன் தெரிவித்தார்.