வன்முறைகளில் ஈடுபடுவோருக்கு எதிராக இராணுவம் தமது முழு அதிகாரங்களை பயன்படுத்தும் என இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க தெரிவித்துள்ளார். இராணுவத் தளபதியினால் விடுக்கப்பட்டுள்ள விசேட செய்தியிலேயே இந்த விடயத்தை அவர் தெரிவித்துள்ளார். தற்போது படையினர் நாட்டில் முழுமையான அமைதியை ஏற்படுத்தியுள்ளனர். ஒரு சிலரின் செயற்பாட்டினை கட்டுப்படுத்த இராணுவத்தினர் அதிகாரத்தை பயன்படுத்தி வருகின்றனர். தேவை ஏற்படின் ஏனைய பாதுகாப்பு தரப்பினருடன் இணைந்து தமது முழு அதிகாரத்தையும் பயன்படுத்துவதற்கும் நடவடிக்கை …
Read More »நாட்டின் பாதுகாப்பு குறித்து பிரதமர் தலைமையில் இடம்பெற்ற உயர்மட்ட கலந்துரையாடல்கள்
குருநாகல் மற்றும் கம்பஹா பகுதிகளில் நேற்று இடம்பெற்ற அமைதியற்ற நிலைமையை பாதுகாப்பை உறுதிப்படுத்துவது தொடர்பான உயர்மட்ட கலந்துரையாடல்கள் அலரி மாளிகை மற்றும் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபம் ஆகியவற்றில் இடம்பெற்றுள்ளன. பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அலரிமாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலில், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், சட்டமா அதிபர், காவற்துறை மா அதிபர், முப்படைகளின் கூட்டு பிரதானி ஆகியோர் கலந்துகொண்டனர். அசம்பாவிதங்கள் நடைபெற்ற பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக இராணுவம் உள்ளிட்ட முப்படை …
Read More »இன்றைய ராசிப்பலன் 14 வைகாசி 2019 செவ்வாய்க்கிழமை
இன்றைய பஞ்சாங்கம் 14-05-2019, சித்திரை 31, செவ்வாய்க்கிழமை, தசமி திதி பகல் 12.59 வரை பின்பு வளர்பிறை ஏகாதசி. பூரம் நட்சத்திரம் காலை 08.53 வரை பின்பு உத்திரம். சித்தயோகம் காலை 08.53 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1/2. ஏகாதசி விரதம். பெருமாள் வழிபாடு நல்லது. இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப …
Read More »ஐ.எஸ் அமைப்பு தமிழீழ விடுதலை புலிகளிடத்தில் இருந்து வேறுப்பட்டது – பிரதமர்
நாட்டின் அபிவிருத்தி, பொருளாதார முன்னேற்றம் என்பவற்றை சிதைப்பதற்கு, ஐ.எஸ்.அமைப்பினருக்கு இடமளிக்கமுடியாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இரத்தினபுரி – மல்வல பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக் கொண்ட போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். ஐ.எஸ் அமைப்பு தமிழீழ விடுதலை புலிகளிடத்தில் இருந்து வேறுப்பட்டது. ஐ.எஸ் அமைப்பினரால் மேற்கொள்ளப்பட்ட குண்டு தாக்குதலில் அதிக எண்ணிக்கையிலான உயிர்களை காவு கொள்ள வேண்டும் என்பதே அவர்களின் முதல் இலக்காகும். அதனை தொடர்ந்து …
Read More »முள்ளிவாய்கால் நினைவேந்தல் வாரம் இன்று ஆரம்பமானது
முள்ளிவாய்கால் நினைவேந்தல் வாரம் இன்று ஆரம்பமானது. இந்த நிகழ்வுகள் இன்று காலை 11 மணியளவில் முள்ளிவாய்க்கால் கப்பலடியில் ஆரம்பித்தன. சுடர் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தி நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. இந்தநிகழ்வில் வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர்களான எம் கே சிவாஜிலிங்கம் மற்றும் புவனேஸ்வரன் உள்ளிட்டவர்கள் கலந்துக் கொண்டனர் என எமது செய்தி தொடர்பாளர் குறிப்பிட்டார். முள்ளிவாய்கால் நினைவு வாரம் ஒவ்வொரு வருடமும் மே மாதம் 12 திகதி முதல் …
Read More »கல்லறையில் என் கண்ணீர்
” கல்லறையில் என் கண்ணீர்….” வண்ண வண்ண பூவே நீ வாசம் வீச வருவாயோ…. வாடகையின்றி என் வாடாத பூவாய் நீ…… வாழ்க்கை எனும் ஓடத்திலே வாழ்ந்து வந்த வேளையிலே வாழ்விழந்த வினோதமாய் வானுயரும் காலமிதே…… பூவிழி ஓரமாய் நீயும் பூங்காற்றில் அசையுமே பூவே உன் திருமுகத்தை பூத்தாயே என் பூவிதழ்லே பூவிழந்த கொடியாக நானுமே பூலோகத்தை சுற்றி சுற்றியே பூவற்றுப் போனதேனோ பூவே நீ மீண்டும் பூப்பாயா……. கண் …
Read More »இன்றைய ராசிப்பலன் 13 வைகாசி 2019 திங்கட்கிழமை
இன்றைய பஞ்சாங்கம் 13-05-2019, சித்திரை 30, திங்கட்கிழமை, நவமி திதி பகல் 03.21 வரை பின்பு வளர்பிறை தசமி. மகம் நட்சத்திரம் பகல் 10.27 வரை பின்பு பூரம். மரணயோகம் பகல் 10.27 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. சுப முயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும். இராகு காலம்- காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, …
Read More »முள்ளிவாய்கால் நினைவேந்தல் அனுஷ்டிப்பினை அரசியல்மயப்படுத்த வேண்டாம் -வாசுதேவ
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிப்பினை அரசியல் தேவைகளுக்காக பயன்படுத்திக்கொள்ளாமல் பாதிக்கப்பட்ட மக்களின் உறவுகளின் உணர்வுக்கு மதிப்பளித்து நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். தேசிய பாதுகாப்பு தொடர்பில் கடந்த காலங்களில் அரசாங்கம் எவ்வித ஏற்பாடுகளையும் முன்னெடுக்கவில்லை. எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் குடும்ப உறுப்பினர்கள் கண்காணிப்பதற்கு முழுமையான நேரத்தை செலவிட்டது. தேசிய பாதுகாப்பு தொடர்பில் ஆரம்பத்தில் இருந்து எழுந்த சாதாரண விடயங்களையும் பொருட்படுத்தாமல் செயற்பட்டதன் விளைவே …
Read More »இராணுவத் தளபதி வெளியிட்ட கருத்து
பாதுகாப்புத் தரப்பினர் தொடர்பில் நம்பிக்கை வைத்து, அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்க பொதுமக்களிடம் கோரியுள்ளார். எமது செய்திச் சேவைக்கு வழங்கிய செவ்வின்போதே அவர் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார். இணக்கப்பாட்டுடன் செயற்படுவது தொடர்பில், குறிப்பாக நாட்டின் புலனாய்வுத்துறை தொடர்பில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. நாட்டில் யுத்தம் ஒன்று இடம்பெறாத சந்தர்ப்பத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு தொடர்பான பொறுப்பு இராணுவத்திற்கு இல்லை. அதற்காக வேறு குழுக்கள் உள்ளன. அந்தக் …
Read More »ஆயுத உற்பத்தியே பயங்கரவாதம் தோற்றம் பெறுவதற்கு காரணம்
உலகின் பலம்வாய்ந்த நாடுகளின் ஆயுத உற்பத்தியே பயங்கரவாதம் தோற்றம் பெறுவதற்கு காரணமாகும் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன குற்றம் சுமத்தியுள்ளார். பொலனறுவையில் இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். ஆயுத உற்பத்தி இடம்பெற்றிருக்காவிட்டால், பயங்கரவாதம் தோற்றம் பெற்றிருக்காது என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
Read More »
Tamilpriyam | Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamil nadu News | Sri Lankan Tamil News Tamil News,Online Tamil News,Tamil News Live,Tamilnadu News,Oneindia Tamil,live tamil news Portal,online tamil news,Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil,all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology,online tamil news, tamil news portal, tamil actors, tamil actresses, astrology news in tamil, chennai news,