உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பில் ஆராய்ந்து நாடாளுமன்றில் அறிக்கை சமர்ப்பிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள விசேட தெரிவுக்குழுவின் சாட்சி விசாரணைகள் இன்று ஆரம்பமாகின. நாடாளுமன்ற குழு அறை இலக்கம் 3இல் இன்று முற்பகல் ஆரம்பமான தெரிவுக்குழுவின் சாட்சி விசாரணைகளை அறிக்கையிட ஊடகங்களுக்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. இந்த தெரிவுக்குழுவில், பாதுகாப்புச் செயலாளர் சாந்த கோட்டேகொட முதலாவது நபராக சாட்சியமளித்தார். தெரிவுக்குழுவின் தலைவரான பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறியினால், பாதுகாப்புச் செயலாளரிடம் சாட்சி விசாரணைகள் …
Read More »பெண்கள் உட்பட ஐவர் காயம்…
முல்லைத்தீவு – மாங்குளம் பகுதியில் நேற்று இரவு, வீடொன்றுக்குள் வீடு புகுந்து, வாள் வெட்டு குழுவினர் நடத்திய தாக்குதலில் பெண்கள் உட்பட ஐவர் காயமடைந்ததாக எமது செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்கள் மாங்குளம் வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், குறித்த வீட்டில் இருந்த பொருட்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதுடன், சில பொருட்களை குறித்த குழுவினர் களவாடி சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மாங்குளம் காவற்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.
Read More »நடிகர் விஜய் ’அதை எல்லாம் பார்க்க மாட்டார் ’ – பிரபல நடிகர் சுவாரஸ்ய தகவல்
தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் விஜய். தற்போது அவர் தளபதி 63 என்ற பெயரிடப்படாத படத்தில் நடித்துவருகிறார். பிரபல இயக்குநர அட்லி இப்படத்தை இட்யக்குகிறார். பல முன்னணி நட்சத்திரங்கள் திரையுலக பிரபலங்கள் இப்படத்தில் நடித்துவருகிறார்கள். இதில் நடிகர் சவுந்தரராஜா என்பவரும் இதில் இணைந்து நடித்துவரும் நிலையில் தற்போது விஜய்யை பற்றி ஒரு தகவல் தெரிவித்துள்ளார். நடிகர் சவுந்தரராஜா ஏற்கனவே சுந்தரபாண்டியன், தர்மதுரை, கடைக்குட்டி சிங்கம் போன்ற …
Read More »சோமாலியா வரைபடத்தில் காணாமல் போனது எப்படி?
எத்தியோப்பியா வெளியிட்ட வரைபடத்தில் சோமாலியா காணாமல் போனது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. தாங்கள் தயாரித்த வரைபடத்தில் பக்கத்து நாடான சோமாலியாவை தங்கள் நாட்டோடு சேர்த்து கொண்டதற்காக எத்தியோப்பியா வெளியுறவுத் துறை அமைச்சகம் மன்னிப்பு கேட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட குழப்பத்திற்காக ஓர் அறிக்கை வெளியிட்டு மன்னிப்பு கேட்டு கொண்டுள்ளது அந்நாடு. அந்த வரைப்படத்தில், சோமாலியா இல்லாத அதே நேரம், உலகம் அங்கீகரிக்காத சோமாலிலாண்ட் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Read More »இருட்டறையில் படுமோசமான உடையணிந்து ஸ்ரேயா சரண் அடித்த கூத்து!
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் டாப் நடிகையாக இருந்தவர் ஸ்ரேயா சரண். ரஜினி, விஜய் உள்பட தென்னிந்திய சினிமாவின் பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். ‘மழை, சிவாஜி, அழகிய தமிழ் மகன் ‘போன்ற படங்களில் நடித்து சூப்பர் ஹிட் வெற்றியை கொடுத்தவருக்கே படவாய்ப்புகள் அடுத்தடுத்து குறைந்துகொண்டே வந்தது. இதனால் திடீரென்று தனது நீண்ட நாள் காதலரான அன்ரீவ் கோஸ்சிவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின்னர் நீண்டநாள் இடைவெளிக்கு பிறகு …
Read More »இன்றைய ராசிப்பலன் 29 வைகாசி 2019 புதன்கிழமை
இன்றைய பஞ்சாங்கம் 29-05-2019, வைகாசி 15, புதன்கிழமை, தசமி திதி பகல் 03.21 வரை பின்பு தேய்பிறை ஏகாதசி. உத்திரட்டாதி நட்சத்திரம் இரவு 09.17 வரை பின்பு ரேவதி. சித்தயோகம் இரவு 09.17 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். அக்னி நட்சத்திரம் முடிவு காலை 07.46 மணிக்கு. இராகு காலம் மதியம் 12.00-1.30, …
Read More »பயங்கரவாத தாக்குதலுக்கு காரணம்
நாட்டின் பாதுகாப்பு பிரிவு, குழுவாக செயற்படாத காரணத்தினாலேயே பயங்கரவாத தாக்குதலுக்கு நாடு முகம் கொடுக்க நேர்ந்ததாக அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நுவரெலியா – கெலகொல பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார். நாட்டை பாதுகாக்க வேண்டிய கடமை பாதுகாப்பு தரப்புக்கே உள்ளது. பாதுகாப்புத் தரப்பின் தலைமைகளுக்கு இடையில் பிணக்குகள் இருந்தால், குழுவாக செயற்பட முடியாத நிலைமை ஏற்படும். காவற்துறை மா அதிபர், பயங்கரவாத தடுப்பு பிரிவிற்கோ, …
Read More »பாரவூர்தியுடன் மோதுண்ட உந்துருளி..
ஹொரன – பெல்லபிடிய பிரதேசத்தில் நேற்றைய தினம் பாரவூர்தி மற்றும் உந்துருளி நேருக்கு நேர் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் உந்துருளியாளர் உயிரிழந்துள்ளார். உந்துருளியாளர் மற்றும் ஓர் வாகனத்தினை முன்னோக்கி செல்ல முற்பட்ட போது பாரவூர்தியுடன் மோதுண்ட குறித்த விபத்து நேர்ந்துள்ளது.
Read More »அவநம்பிக்கை பிரேரணை ஆதரித்து வாக்களிக்கவிருப்பதாக சிவசக்தி ஆனந்தன் தெரிவிப்பு
அமைச்சர் றிசாட் பதியுதீன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணை ஆதரித்து வாக்களிக்கவிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். எமது செய்தி சேவைக்கு வழங்கிய விசேட செவ்வியில் அவர் இதனைக் கூறியுள்ளார். முதலில் அமைச்சர் றிசாட் பதியுதீன் தமது பதவியில் இருந்து விலகி, அவர் மீதான விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று சிவசக்தி ஆனந்தன் கோரினார். எனினும் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படுமிடத்து, அவருக்கு எதிரான அவநம்பிக்கை …
Read More »இன்றைய ராசிப்பலன் 28 வைகாசி 2019 செவ்வாய்க்கிழமை
இன்றைய பஞ்சாங்கம் 28-05-2019, வைகாசி 14, செவ்வாய்க்கிழமை, நவமி திதி பகல் 01.31 வரை பின்பு தேய்பிறை தசமி. பூரட்டாதி நட்சத்திரம் மாலை 06.58 வரை பின்பு உத்திரட்டாதி. மரணயோகம் மாலை 06.58 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. முருக வழிபாடு நல்லது. சுபமுயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப …
Read More »