”அதிமுக, பாஜக கூட்டணியுடன் ரஜினி ஆட்சியை பிடிப்பார்” என அதிமுகவில் இணைந்த ராதாரவி கருத்து தெரிவித்துள்ளார். திமுக கட்சியில் தொடர்ந்து இருந்து வந்த நடிகர் ராதாரவி கடந்த சில மாதங்களுக்கு முன்பு சில பிரச்சினைகளால் திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இணைந்தார். நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதாக அறிவித்ததிலிருந்து அவரை தங்கள் கட்சியோடு கூட்டணி சேர்க்க பாஜக முயன்று வருகிறது. தற்போது பாஜக மற்றும் …
Read More »தூத்துக்குடியில் கனிமொழி வெற்றிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெறுவதாக தமிழிசை மனு!
தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளதால் வழக்கை தொடர்ந்து நடத்த விரும்பவில்லை என்று அவர் மனுவில் குறிப்பிட்டுள்ளார். கனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கை திரும்ப பெற அனுமதிக்ககோரி தமிழிசை செளந்தரராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். தூத்துக்குடியில் கடந்த மக்களவை தேர்தலில் திமுக வேட்பாளர் கனிமொழி, வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வெற்றி பெற்றதாகவும், வேட்புமனுவில் சில தகவல்களை மறைத்ததாகவும் கூறி, அவர் வெற்றியை செல்லாது என்று அறிவிக்கக் கோரி அப்போதைய …
Read More »”தமிழிசைக்கு மத்திய அமைச்சர் பதவி ஏன் கொடுக்கவில்லை??
தெலுங்கானா கவர்னராக டாக்டர்.தமிழிசை சௌந்தரராஜன் பதவியேற்றுள்ள நிலையில் “அவருக்கு ஏன் மத்திய அமைச்சர் பதவி அளிக்கவில்லை?” என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார். சமீபத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெலுங்கானா கவர்னராக நியமிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து நேற்று கவர்னராக பதவியேற்ற அவர், 6 பேருக்கு பதவி பிரமாணம் செய்துவைத்தார். இந்நிலையில் புதுக்கோட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட விடுதலை சிறுத்தை கட்சித் …
Read More »பாஜகவில் இருந்து விலகினார் தமிழிசை செளந்திரராஜன்
தமிழக பாஜக தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் தமிழிசை செளந்திரராஜன் அதுமட்டுமின்றி பாஜகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் அவர் விலகினார். தமிழக பாஜக தலைவராகவும் பாஜகவின் முக்கிய தலைவராகவும் விளங்கிய தமிழிசை செளந்திரராஜன் இன்று காலை தெலங்கானா ஆளுநராக நியமனம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டார். ஒரு மாநிலத்தின் கவர்னர் எந்த ஒரு அரசியல் கட்சியையும் சாராதவராக இருக்க வேண்டும் என்ற் நிலையில் தமிழிசை செளந்திரராஜன் தனது கட்சி பதவியை ராஜினாமா …
Read More »விஜய் அரசியலுக்கு வந்தால் பாஜக அவரை வரவேற்கும்: நாராயண்
விஜய் அரசியலுக்கு வந்தால் பாஜக அவரை வரவேற்கும் என்று பாஜகவின் நாராயணன் இன்று தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடைபெற்ற விவாதத்தில் கூறினார் யார் யாரோ அரசியலுக்கு வரும்போது விஜய் அரசியலுக்கு வந்தால் என்ன? அவர் அரசியலுக்கு வந்தால் நாங்கள் வரவேற்போம் என்று சீமான் செய்தியாளர்களிடம் இன்று பேசினார். இது குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றில் விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தின்போது ‘சீமான் போன்றவர்களே அரசியலுக்கு வரும்போது விஜய் போன்ற ஒருவர் …
Read More »முன் ஜாமீன் பெற்றார் ப.சிதம்பரம் – உத்தரவிட்ட உச்சநீதிமன்றம்
முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் அமலாக்கத்துறைக்கு எதிராக தொடர்ந்த வழக்கில் முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம். சிபிஐ வழக்கு திங்கட்கிழமை விசாரணைக்கு வரும் என்றும் கூறப்பட்டுள்ளது. 2007ல் நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் ஐஎன்எக்ஸ் மீடியா அந்நிய முதலீட்டை பெற அனுமதி வழங்கியதாகவும், அதற்கு லஞ்சமாக பணம் பெற்றதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. அதேசமயம் சட்ட விரோத பண பரிவர்த்தனை குறித்த வழக்கை அமலாக்கத்துறையினர் விசாரித்து …
Read More »ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் காங்கிரஸ் மீது குற்றம் சாட்டிய வைகோ
ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் காங்கிரசை அவதூறாக பேசிய வைகோவை பச்சோந்தி என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி விமர்சித்துள்ளார். இதனால் திமுக கூட்டணியில் பிளவு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. ஜம்மு காஷ்மீர் சிறப்பு அதிகார ரத்து மசோதா மீதான விவாதத்தில் பேசிய வைகோ, காங்கிரஸ் கட்சி மற்றும் ஜவஹர்லால் நேருவின் தவறான கொள்கையே ஜம்மு காஷ்மீரின் நிலைக்கு காரணம் என்று குற்றம்சாட்டியிருந்தார். வைகோவின் மாநிலங்களவை பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள …
Read More »பிரபாகரனின் சதியிலிருந்து இந்தியாவை காப்பற்றியது ராஜபக்சே தான்
பாஜக-வின் மூத்த தலைவர் சுப்ரமணியன் சவாமி, விடுதலை புலிகளின் சதியிலிருந்து இந்தியாவை காப்பாற்றியது இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்சே தான் என தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். பாஜக-வின் மூத்த தலைவர் சுப்ரமணியம் சுவாமி, இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் தீவிர ஆதரவாளர். பல வருடங்களாகவே ராஜபக்ஷேவை தனது நண்பர் என்றும், அவர் ஒரு சிறந்த ஆட்சியாளர் என்றும் புகழ்ந்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில், சுப்ரமணியன் சுவாமியை தனது …
Read More »ஹெச் ராஜாவுக்கு தமிழிசைப் போட்ட உத்தரவு
தமிழகத்தில் உறுப்பினர் சேர்க்கையை அதிகப்படுத்த மும்முரம் காட்டாத ஹெச் ராஜாவை தமிழிசை கடிந்துகொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பாஜகவில் உறுப்பினர் சேர்க்கையைத் துரிதப்படுத்த மிஸ்டு கால் கொடுத்து உறுப்பினர் ஆகும் திட்டத்தை அறிமுகப்படுத்தினர். இதன் மூலம் பலரும் தமிழக பாஜகவில் உறுப்பினர் ஆனதாக சொல்லப்படுகிறது. ஆனால் நடந்து முடிந்த தேர்தலில் பாஜக வாங்கிய வாக்குகளோ அதற்கு நேர் எதிராக உள்ளது. புதிதாக நியமிக்கப்பட்டிருக்கும் செயல் தலைவர் ஜேபி நாட்டா இதுபற்றி தமிழக …
Read More »ரஜினியின் அரசியல் பிரவேசத்தால் யாருக்கு ஜாக்பாட்?
ரஜினி அரசியலுக்கு வருவதை கேஎஸ்.அழகிரி விரும்பாவிட்டாலும் முக.அழகிரி விரும்புவார் என எஸ்.வி.சேகர் பேட்டியளித்துள்ளார். ரஜினி சமீபத்தில் நடைபெற்ற காப்பான் இசை வெளியீட்டு விழாவில் சூர்யா புதிய கல்விக்கொள்கை குறித்து பேசியதற்கு ஆதரவு தெரிவித்திருந்தார். பாஜக ஆதரவாளராக பார்க்கப்படும் ரஜினி சூர்யாவை ஆதரித்து பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் எஸ்.வி.சேகர் ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து பேட்டியளித்துள்ளார். எஸ்.வி.சேகர் தெரிவித்ததாவது, ரஜினி கட்சி தொடங்குவதற்கான அடிப்படை கட்டமைப்பு பணிகளை எல்லாம் முடித்து …
Read More »