பிரதமர் மோடி அறிவித்தது போல் தமிழ்நாட்டில் இருந்து புறப்படும் விமானங்களில் விரைவில் தமிழில் அறிவிப்புகள் வெளியிடப்படும் என தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பாண்டியராஜன் இதனை தெரிவித்தார். இதையும் பாருங்க : இலங்கை தமிழகம் இன்றைய ராசிபலன் உலக செய்திகள்
Read More »கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு குறைவு
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் அளவு குறைந்ததால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 6,943 கன அடியாக குறைந்தது. கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு குறைந்துள்ளதாலும், காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் அளவு குறைந்ததாலும் மேட்டூர் அணைக்கு 7,510 கன அடியாக இருந்த நீர்வரத்து காலை நிலவரப்படி 6,943 கன அடியாக குறைந்துள்ளது. அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும், நீர் இருப்பு 93 புள்ளி …
Read More »சர்க்கரை அட்டையை அரிசி அட்டையாக ஆன்லைனில் மாற்றலாம்
சர்க்கரைக்கான குடும்ப அட்டையை அரிசிக்கான குடும்ப அட்டையாக ஆன்லைன் மூலமாகவே மாற்றிக் கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. சர்க்கரைக்கான குடும்ப அட்டையை அரிசிக்கான குடும்ப அட்டையாக மாற்ற விரும்புபவர்களின் வசதிக்காக, அவற்றை ஆன்லைன் மூலமாகவே மாற்றிக் கொள்வதற்கு தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. அதன் படி, சர்க்கரைக்கான குடும்ப அட்டையை மாற்ற விரும்புவோர் குடும்ப அட்டையின் நகலை இணைத்து ஆன்லைனில் சமர்ப்பிக்கலாம். இன்று முதல் வரும் 26 ஆம் …
Read More »தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு
தமிழகத்தில் வெப்ப சலனம் காரணமாக தேனி, திண்டுக்கல், உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. வெப்ப சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என்றும், தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோயம்புத்தூர், தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ஓரு சில இடங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் …
Read More »அக்ஷய்குமார் ஜோடியாக அறிமுகமாகும் உலக அழகி
நடிகர் அக்ஷய்குமார் நடிக்கும் அடுத்த படத்தில் அவருக்கு ஜோடியாக 2017ல் உலக அழகி பட்டம் வென்ற மனுஷி சில்லர் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. யாஜ் ராஜ் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு ‘ப்ருத்விராஜ்’ என பெயரிடப்பட்டுள்ளது. 12ம் நூற்றாண்டில் வாழ்ந்த மன்னர் ப்ருத்விராஜ் சௌகானை பற்றிய படத்தில் மன்னர் ப்ருத்விராஜ் கேரக்டரில் அக்ஷய் குமாரும், சன்யோகிதா கேரக்டரில் மனுஷி சில்லாரும் நடிக்க உள்ளனர். இந்த படம் 2020ம் ஆண்டு தீபாவளியன்று …
Read More »பிக்பாஸ் டைட்டில் வின்னரின் படம் ரிலீஸ் எப்போ தெரியுமா ?
பிக்பாஸ் நிகழ்ச்சி முதல் சீசனில் கலந்துக்கொண்டவர் ஆரவ். தற்போது லாஸ்லியா -கவினுக்கு கிடைத்த வரவேற்பு அந்த சீசனில் ஆரவ்-ஓவியாவிற்கு கிடைத்தது. ஆரவும்-ஓவியாவும் காதலிப்பதாக சமூக வலைதளங்களில் பல செய்திகள் வந்தாலும், நாங்கள் நல்ல நண்பர்கள் மட்டுமே என இருவரும் சொல்லிவிட்டனர். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பு சைத்தான், ஓ கே கண்மணி ஆகிய படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் ஆரவ் தோற்றமளித்தார். ஆனால் தற்போது இயக்குநர் சரண் இயக்கத்தில் மார்க்கெட் ராஜா …
Read More »பொய்யான செய்தி வெளியிட்டால் ஊடகங்கள் மீது வழக்கு: முதல்வர் எச்சரிக்கை
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஊடகங்கள் என்றால் பொதுமக்கள் மத்தியில் ஒரு மரியாதை இருந்தது. அனுபவம் வாய்ந்தவர்கள் மட்டுமே செய்திகளை உருவாக்கி அதனை வெளியிட்டு வந்தனர். ஆனால் தற்போது டைப் அடிக்க தெரிந்தவர்கள் அனைவருமே செய்தியாளர்கள் ஆகிவிட்டனர். குறிப்பாக சமூக வலைதளங்களில் இஷ்டத்துக்கு செய்தி என்ற பெயரில் வதந்தியை வெளியிடுவது தொடர் கதையாகி வருகிறது இந்த நிலையில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்க ஆந்திர அரசு ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. …
Read More »ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடும் பிரதமர் மோடி
காஷ்மீர் எல்லையில் ராணுவ வீரர்களுடன் பிரதமர் மோடி தீபாவளி பண்டிகையை கொண்டாடுகிறார். ஒவ்வொரு ஆண்டும் பிரதமர் மோடி, ராணுவ வீரர்களுடன் தீபாவளியை கொண்டாடி வருகிறார். கடந்த ஆண்டு பாகிஸ்தான் மற்றும் சீன எல்லைப் பகுதியில், உள்ள இந்திய ராணுவ வீரர்களுடன் அவர் தீபாவளி கொண்டாடினார். இந்த தீபாவளி பண்டிகையையும் ராணுவ வீரர்களுடன் கொண்டாட உள்ளார். காஷ்மீரில் 370-வது சட்டப் பிரிவு ரத்து செய்யப்பட்ட நிலையில், முதல் முறையாக பிரதமர் மோடி …
Read More »அனைவரது வாழ்விலும் நலங்களும் வளங்களும் பெருகட்டும்
அனைவரது வாழ்விலும் அமைதி தவழட்டும் என்றும், அனைத்து நலங்களும் வளங்களும் பெருகட்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களை பெரும் துன்பத்திற்கு ஆளாக்கிய நரகாசுரனை அன்னை மகாலட்சுமி துணையுடன் திருமால் அழித்த தினமே தீபாவளி பண்டிகையாக கொண்டாடப்படுவதாக கூறியுள்ளார். இந்த தீபாவளி திருநாள் தீமைகள் அகன்று நன்மைகள் பெருகும் நாளாகவும், இருள் நீங்கி ஒளி நிறைந்திடும் நன்னாளாகவும் விளங்குவதாக …
Read More »ராஜினாமா என்ற பேச்சுக்கே இடமில்லை: பிரதமர் இம்ரான்கான்
பாகிஸ்தானில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வருவதால், பாகிஸ்தானின் கடன் சுமை 6 லட்சம் ரூபாய் கோடியில் இருந்து 30 லட்சம் ரூபாய் கோடியாக உயர்ந்துள்ளது. பொருளாதார பிரச்சினையை சரிகட்ட முடியாமல் பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான அரசு திணறி வருகின்ற நிலையினை காரணம் காட்டி, இம்ரான்கான் பதவி விலக வேண்டுமென எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த நிலையில் பாகிஸ்தானின் எதிர்கட்சிகள் ஒன்றுக் கூடி ஆசாதி மார்ச் என்ற பெயரில் நாடு …
Read More »