Tag Archives: Tamilnadu

சீமானுக்கு பதிலடி தந்த காங்கிரஸ் தலைவர்

அழகிரி

”விடுதலை புலிகள் தான் தமிழர்களை கொன்றது” சீமானுக்கு பதிலடி தந்த காங்கிரஸ் தலைவர் சிங்கள ராணுவத்தை விட பெரும்பாலான தமிழர்களை கொன்றது விடுதலை புலிகள் தான் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி சீமானுக்கு பதிலடி கொடுத்துள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை குறித்து சர்ச்சையாக சீமான் பேசியதை தொடர்ந்து அவர் மீது தேசிய ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசுதல், வன்முறையை தூண்டும் வகையில் பேசுதல் ஆகிய …

Read More »

நாங்கதான் ராஜீவ் காந்தியை கொன்றோம்!?

சீமான்

முன்னாள் தமிழர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டது குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழக சட்டசபை தொகுதிகளான விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரியில் நடைபெறும் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்டியிடுகிறது. இந்நிலையில் விக்கிரவாண்டி தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து கூட்டத்தில் பேசிய சீமான் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருப்பது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி …

Read More »

தமிழில் டிவிட் செய்த பிரதமர் மோடி.

மோடி

இன்று மற்றும் நாளை என இரு நாட்கள், சீன அதிபரை சந்திக்கவுள்ள பிரதமர் மோடி, சென்னை வந்துள்ள நிலையில் தனது டிவிட்டர் பக்கத்தில் தமிழில் பதிவு செய்து தனது மகிழ்ச்சியை வெளிபடுத்தியுள்ளார். இன்று மற்றும் நாளை என இரு நாட்கள், சீன அதிபரை சந்திக்கவுள்ள பிரதம் மோடி, தற்போது சென்னைக்கு விமானம் மூலம் வந்தடைந்தார். அவரை தமிழக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ், ஆளுநர் பன்வரிலால் புரோகித் ஆகியோர் …

Read More »

சீன அதிபரை சந்திக்கிறார் ரஜினிகாந்த்!

ரஜினி

மாமல்லபுரம் வரும் சீன அதிபரை சந்திக்க நடிகர் ரஜினிகாந்துக்கு சிறப்பு அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சீன அதிபர் ஜின்பிங்கும், இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் நாளை மாமல்லபுரத்தில் சந்தித்து பேச இருக்கின்றனர். இந்த விழாவுக்கான ஏற்பாடுகள் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகின்றன. பாரம்பரிய நடன நிகழ்ச்சிகள் போன்றவை சீன அதிபர் கண்டுகளிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. சீன அதிபர் உடனான சந்திப்பில் கலந்து கொள்ள அரசியல் தலைவர்கள், அதிகாரிகள் ஆகியோருக்கு அழைப்பிதழ்கள் …

Read More »

தமிழகத்தின் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தின்

கோவை, நீலகிரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் அடுத்த 24 மணிநேரத்தில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெப்பச்சலனம் காரணமாக உள் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை மையம் கூறியுள்ளது. கோவை, நீலகிரி, திண்டுக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய 6 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், கடந்த 24 …

Read More »

தூத்துக்குடியில் கனிமொழி வெற்றிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெறுவதாக தமிழிசை மனு!

கனிமொழி

தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளதால் வழக்கை தொடர்ந்து நடத்த விரும்பவில்லை என்று அவர் மனுவில் குறிப்பிட்டுள்ளார். கனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கை திரும்ப பெற அனுமதிக்ககோரி தமிழிசை செளந்தரராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். தூத்துக்குடியில் கடந்த மக்களவை தேர்தலில் திமுக வேட்பாளர் கனிமொழி, வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வெற்றி பெற்றதாகவும், வேட்புமனுவில் சில தகவல்களை மறைத்ததாகவும் கூறி, அவர் வெற்றியை செல்லாது என்று அறிவிக்கக் கோரி அப்போதைய …

Read More »

சுபஸ்ரீயின் பெற்றோருக்கு 5 லட்சம் வழங்கிய ஸ்டாலின்.. ஆறுதலா? அரசியலா?

சுபஸ்ரீ பெற்றோருக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கட்சியின் அறக்கட்டளையிலிருந்து 5 லட்சம் நிதியுதவியாக வழங்கியுள்ளார். சமீபத்தில் சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த சுபஸ்ரீ என்ற இளம்பெண் பல்லாவரம் அருகே மோட்டார் வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, அவர் மீது பேனர் விழுந்தது. பேனர் விழுந்ததில் தடுமாறி கிழே விழுந்த சுபஸ்ரீ மீது அவருக்கு பின்னால் வந்த லாரி ஏறியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இந்த சம்பவத்தை அடுத்து …

Read More »

காமராஜரின் திட்டத்தை தவிடுபொடியாக்குகிறது தமிழக அரசு.. பொதுத்தேர்வு குறித்து கமல்ஹாசன் விமர்சனம்

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன்

5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் என்பதை தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில், இது காமராஜர் மற்றும் எம்.ஜி.ஆரின் திட்டங்களை தவிடுபொடியாக்கும் என்று நடிகர் கமல்ஹாசன் விமர்சித்துள்ளார். தமிழக அரசு 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என அறிவித்துள்ளது. இதை தொடர்ந்து பல அரசியல் தலைவர்களும், கல்வியாளர்களும், சமூக ஆர்வலர்களும் தமிழக அரசை விமர்சித்து வருகின்றனர். இவர்களை தொடர்ந்து நடிகர் …

Read More »

என் ரசிகர்கள் யாரும் எனக்கு பேனர்கள் வைக்கவேண்டாம்

நடிகர் விஜய்

பிகில் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்கள் யாரும் பேனர் வைக்கவேண்டாம் என நடிகர் விஜய் வலியுறுத்தியுள்ளார். குரோம்பேட்டையைச் சேர்ந்த சுபஸ்ரீ என்ற இளம் பெண் மோட்டார் வாகனத்தில் பல்லாவரம் அருகே சென்றுகொண்டிருந்த போது, சாலையின் நடுவே இருந்த பேனர் ஒன்று, காற்றில் சரிந்து அவர் மீது விழுந்தது. இதனால் நிலை தடுமாறி கீழே விழுந்த அவரை, அவருக்கு பின்னால் வந்த லாரி ஏற்றியது. இதனால் சம்பவ இடத்திலேயே சுபஸ்ரீ …

Read More »

”தமிழிசைக்கு மத்திய அமைச்சர் பதவி ஏன் கொடுக்கவில்லை??

திருமாவளவன்

தெலுங்கானா கவர்னராக டாக்டர்.தமிழிசை சௌந்தரராஜன் பதவியேற்றுள்ள நிலையில் “அவருக்கு ஏன் மத்திய அமைச்சர் பதவி அளிக்கவில்லை?” என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார். சமீபத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெலுங்கானா கவர்னராக நியமிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து நேற்று கவர்னராக பதவியேற்ற அவர், 6 பேருக்கு பதவி பிரமாணம் செய்துவைத்தார். இந்நிலையில் புதுக்கோட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட விடுதலை சிறுத்தை கட்சித் …

Read More »