திருகோணமலை கடற்படைத்தளத்திற்கு அருகில் இளைஞன் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். திருகோணமலை தபால் நிலைய வீதியை வசிப்பிடமாகக்கொண்ட தங்கதுரை தனுசன் (21 வயது) என்பவரே இன்று (செவ்வாய்க்கிழமை) காலை இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார். திருகோணமலை கடற்படைத்தளத்திற்கு அருகாமையில் உள்ள வெற்றுக்காணிக்கு கொலையாளியும் குறித்த இளைஞனும் மோட்டார் வண்டியில் சென்றுள்ளனர். அதனைத்தொடர்ந்து குறித்த கொலையாளி கூரிய ஆயுதம் ஒன்றினால் இளைஞனின் கழுத்தில் தாக்கியுள்ளார். இதனையடுத்து காயப்பட்டவர் தான் தப்பித்துக்கொள்வதற்காக வெற்றுக்காணியிலிருந்து …
Read More »