பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் முழுக்க இறுதிப் போட்டிக்கு நேரடியாக செல்லும் வாய்ப்பிற்கான டிக்கெட் டு பினாலே டாஸ்குகள் நடைபெற்று வருகிறது.
இது வரை ஆறு டாஸ்க்குகள் முடிவடைந்த நிலையில் நேற்று ஒரு டாஸ் கொடுக்கப்பட்டது.
இந்த டாஸ்கிங் போட்டியாளர்களுக்கு ஒரு தங்க முட்டை ஒன்று வழங்கப்பட்டது.
அந்த தங்க முட்டை கார்டன் ஏரியாவில் வைக்கப்பட்டிருந்தது.
இந்த தங்க முட்டையை யாரும் உடைக்காமல் போட்டியாளர்கள் கண்காணிக்க வேண்டும்.
அதே போல மற்ற போட்டியாளர்களின் தங்க முட்டைகளை அவருக்கே தெரியாமல் உடைக்க வேண்டும் என்றும் பிக்பாஸ் அறிவித்திருந்தார்.
இந்த டாஸ்கின் போது தங்களது முட்டைகளை பாதுகாக்க வேண்டும் என்பதால் மற்ற போட்டியாளர்கள் யாரும் கழிவறைக்கு கூட செல்லாமல் அமர்ந்து கொண்டிருந்தனர்.
நேற்றய நிகழ்ச்சியில் இந்த டாஸ்கில் இருந்து சாண்டி மட்டும் வெளியேறி இருந்தார் என்பது தெரியும்.
ஆனால், இன்று வெளியான முதல் ப்ரோமவில் புதிய டாஸ்க் ஒன்று கொடுக்கபட்டு.
இருகிறது எனவே, நேற்றய டாஸ்க் என்ன ஆனது என்று ரசிகர்கள் ஆவலுடன் இருந்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்றய போட்டியான முடிவு இன்றய முதல் ப்ரோமவில் சிக்கியுள்ளது.
இன்று வெளியான முதல் ப்ரோமவில் கவின் வாக்கு வாதம் செய்து கொண்டு இருந்தனர்.
அப்போது கவின் பின்னால் ஒரு பலகை அமைக்கபட்டிருந்தது.
அதில் முதல் இடத்தில் முகென் இருக்கிறார், அவரை தொடர்ந்து ஷெரின், தர்ஷன், சேரன், லாஸ்லியா, கவின், சாண்டி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
நேற்றய டாஸ்கில் சாண்டி, ஷெரினின் தங்க முட்டையை உடைக்க சென்று ஷெரினிடம் மாட்டிக்கொண்டார்.
இதனால் அவர் இந்த டாஸ்கில் இருந்து வெளியேறினார். மேலும், தற்போது கிடைத்துள்ள இந்த புகைப்படத்தில் சாண்டி தான் இறுதி இடத்தில் இருகிறார்.
எனவே, இந்த லிஸ்டில் இருப்பது தான் நேற்றய தங்க முட்டை டாஸ்கின் முடிவு என்பது உறுதியாகியுள்ளது.